புதுதில்லி:
தேசத்துரோக வழக்கை எதிர்கொண்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால், பிரதமரை விட தான் சிறந்த தேசபக்தன் என தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து தகவல்களை வெளியிட்டுள்ள கேஜ்ரிவால்…
“என் மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டுள்ளது. தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், ஏழைகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பினேன். இதன் காரணமாகவே அவர்களுக்கு( பாரதீய ஜனதா) நான் தேசத்துக்கு எதிரானவனாக பார்க்கப்படுகிறேன். எனது குரலை நசுக்க முடியாது. ஏழைகளுக்காக நான் தொடர்ந்து போராடுவேன்.
மோடிஜியை விட நான் மிகச்சிறந்த தேசபக்தன். நாட்டை பிளவுப்படுத்த வேண்டும் என கோஷமிட்டவர்களை ஏன் இன்னும் அவர் கைது செய்யவில்லை என நான் கேள்வி எழுப்புகிறேன். ஏனெனில் இது போன்ற கோஷங்களை எழுப்பியவர்கள் காஷ்மீரை சேர்ந்தவர்கள். எனவே இவர்களை கைது செய்தால் மெகபூபா முப்தி கோபம் அடைவார். நமது வீரர்கள் ஒவ்வொரு நாளும் எல்லையில் வீர மரணம் அடைந்து வருகின்றனர். ஆனால், காஷ்மீரில் ஆட்சி அமைப்பதற்காக தேசவிரோத சக்திகளை மோடி அரசு பாதுகாக்கிறது” என தெரிவித்துள்ளார்.
मोदी जी से बड़ा देशभक्त हूँ।मैं पूछता हूँ-देश की बर्बादी के नारे लगाने वालों को अभी तक मोदी जी ने गिरफ़्तार क्यों नहीं किया?(3/5)
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 29, 2016


