திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பலியான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போர்க்குரல் எழுப்பியுள்ளன. நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஆந்திர மாநில போலீசார் கலக்கத்தில் உள்ளனர். எனவே கடத்தல்காரர்கள் முன்னை விட தீவிரமாக செயல்படக்கூடும் என ஆந்திர வனத் துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில், தங்கள் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களைப் பாதுகாக்கவும், கடத்தல்காரர்களின் தாக்குதலில் இருந்து அதிரடிப் படையினரைப் பாதுகாக்கவும் விரிவான திட்டத்தை ஆந்திர மாநில போலீசாரும் வனத்துறையினரும் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர். இதன்படி செம்மரக்காடுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இஸ்ரோவின் உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வனப்பகுதியில் பொருத்த்தவும், அதன் மூலம் இருட்டிலும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை வனப்பகுதி மற்றும் செம்மரக்கட்டை குடோன்களில் பொருத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றைக் கண்காணிக்க திருப்பதியை மையமாகக் கொண்டு கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. மேலும், அதிரடிப்படையைப் போல சிறப்புச்செயற் படையும் அமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், கடத்தல்காரர்கள் பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் வழங்கப்படும். இதன் மூலம் எந்தக் கடத்தல் குழு வனத்துக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையினரின் சிறப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க வழிசெய்யப்படும். ஏற்கெனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, அதன் மூலமே தப்பிய கடத்தல்காரர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள்.
Hot this week
இந்தியா
முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
சற்றுமுன்
ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?
கட்டுரைகள்
அருந்தமிழ் 50: திறனாய்வு!
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
கட்டுரைகள்
பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics
இந்தியா
முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
சற்றுமுன்
ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!
அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?
கட்டுரைகள்
அருந்தமிழ் 50: திறனாய்வு!
கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.
கட்டுரைகள்
பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
விளையாட்டு
FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!
காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

