திருப்பதி: செம்மரக் கடத்தலைத் தடுக்க இஸ்ரோ உதவியுடன் நவீன பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆந்திர மாநில அரசு மேற்கொண்டுள்ளது. திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கட்டையை வெட்டிக் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் ஆந்திர மாநில அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பலியான தொழிலாளர்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் போர்க்குரல் எழுப்பியுள்ளன. நீதிமன்றமும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பதால் ஆந்திர மாநில போலீசார் கலக்கத்தில் உள்ளனர். எனவே கடத்தல்காரர்கள் முன்னை விட தீவிரமாக செயல்படக்கூடும் என ஆந்திர வனத் துறையினர் கருதுகின்றனர். இந்நிலையில், தங்கள் வனப்பகுதியில் உள்ள செம்மரங்களைப் பாதுகாக்கவும், கடத்தல்காரர்களின் தாக்குதலில் இருந்து அதிரடிப் படையினரைப் பாதுகாக்கவும் விரிவான திட்டத்தை ஆந்திர மாநில போலீசாரும் வனத்துறையினரும் சேர்ந்து மேற்கொண்டுள்ளனர். இதன்படி செம்மரக்காடுகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் – இஸ்ரோவின் உதவியுடன் நவீன தொழில்நுட்பக் கருவிகளை வனப்பகுதியில் பொருத்த்தவும், அதன் மூலம் இருட்டிலும் துல்லியமாக படம் பிடிக்கும் கேமிராக்களை வனப்பகுதி மற்றும் செம்மரக்கட்டை குடோன்களில் பொருத்தி கண்காணிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இவற்றைக் கண்காணிக்க திருப்பதியை மையமாகக் கொண்டு கட்டுப்பாட்டு மையம் ஒன்று அமைக்கப்படுகிறது. மேலும், அதிரடிப்படையைப் போல சிறப்புச்செயற் படையும் அமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற வீரர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இவர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி, ஆயுதங்கள், கடத்தல்காரர்கள் பற்றிய பட்டியல் சேகரிக்கப்பட்டு கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும் வழங்கப்படும். இதன் மூலம் எந்தக் கடத்தல் குழு வனத்துக்குள் ஊடுருவுகிறது என்பதை கண்டறியப்பட்டு, அந்தப் பகுதியில் தயாராக நிறுத்தப்பட்டுள்ள அதிரடிப்படையினரின் சிறப்புப் படைக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதன்மூலம் கடத்தல்காரர்களைப் பிடிக்க வழிசெய்யப்படும். ஏற்கெனவே முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு, அதன் மூலமே தப்பிய கடத்தல்காரர்கள் 61 பேர் கைது செய்யப்பட்டனர் என்று போலீசார் கூறுகிறார்கள்.
Hot this week
சற்றுமுன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...
சற்றுமுன்
திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம்
நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

Topics
சற்றுமுன்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...
சற்றுமுன்
திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!
யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகம்
நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.
கட்டுரைகள்
ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!
பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
சற்றுமுன்
மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!
வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம். இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும்.

