இது வெறும் டிரெய்லர்தான்… மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு…!

Published:

modi in theni - 2026

மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐநா அமைப்பு அறிவித்திருப்பது இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்தின் போது பெருமிதம் தெரிவித்தார்

ஐநா., எடுத்த இந்த முடிவு மூலம் சர்வதேச அளவில் இந்தியாவின் குரல்வளையை வெகுநாள் நெருக்கி வைத்திருக்க முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மவுலானா மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முடிவு ஒருமித்த கருத்துடன் எடுக்கப்பட்டிருப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது என்றார். இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டு இருக்கிறது என்றாலும் இது மிக சிறப்பான முடிவு என்று கூறினார் பிரதமர் மோடி

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை வேரோடு சாய்க்க இந்தியா எடுத்துள்ள முயற்சிக்கு சர்வதேச நாடுகள் அளிக்கும் மிகப் பெரும் அங்கீகாரம் என்றும் இது இந்தியாவின் மிகப் பெரும் வெற்றி என்றும் கூறினார் பிரதமர் மோடி

ALSO READ:  உங்களால் இந்த தேசத்துக்கு என்ன ஆதாயம் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள்!

130 கோடி இந்தியர்களின் குரல் ஐநாவில் தற்போது எதிரொலித்திருக்கிறது என்று கூறிய பிரதமர் மோடி பயங்கரவாதத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை வெறும் ஆரம்பம் தான் என்றும் அடுத்து நடக்கப் போவதைக் காண அனைவரும் காத்திருங்கள் என்றும் பேசினார்@dhinasari.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img