விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

1001368925 - 2026

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு ஆலையில் மீண்டும்
வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து
20 பேர் உயிரிழப்பு 6 பேர் காயம் என முதற்கட்ட தகவல்.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டியில் வனஜா பட்டாசு ஆலையில் இன்று மாலை நடைபெற்ற வெடிவிபத்தில் 4அறைகள் சேதமாகின.20 பேர் உயிரிழந்துள்ளனர் 6 பேர் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி.
இங்கு கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை இயங்கி வருகிறது.இது டி.ஆர்.ஓ.லைசன்ஸ் உடன் இயங்கி வருகிறது.
இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை பட்டாசு ஆலைகள் இயங்காது.
தேர்தல் நாளான 23 ம் தேதி விடுமுறை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால் இன்று
வேலை வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு அறையில் உராய்வு காரணமாக திடீரென பட்டாசு வெடித்தது.தீயானது மற்ற அறைகளுக்கும் பரவியது.வெடிச்சத்தம் கேட்ட தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியே தப்பி ஓடினர். இந்த வெடி விபத்தில் 4 அறைகள் சேதமடைந்தன.
23 பேர் உயிரிழந்துள்ளனர்
பலர் காயமடைந்தனர் .

தகவலறிந்த சிவகாசி சாத்தூர் விருதுநகரை சேர்ந்த தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
தீயணைப்புத் துறையினர்
தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடல் கருகிய நிலையில் உள்ளதால் ஆண் பெண் என உடனடியாக அடையாளம் காண முடியவில்லை.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் மீண்டும்
இரவு வெடி விபத்து ஏற்பட்டது தீயணைப்பு வீரர்கள், போலீசார் பலர் பலத்த காயமடைந்தனர்.

விருதுநகர் அருகே உள்ளது கட்டனார்பட்டி. இங்குள்ள வனஜா பட்டாசு ஆலையில் ஞாயிறன்று மாலை திடீரென ஏற்பட்ட உராய்வின் காரணமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தை பார்வையிட மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மற்றும் அமைச்சர்கள் சென்றனர். இந்நிலையில் தீயணைப்புத்துறையினர் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளுக்குள் தொழிலாளர்களின் உடல்கள் ஏதும் சிக்கியுள்ளதா? என பார்த்து அதை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்த வேதிக் கலவையானது யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில், தீயணைப்பு வீரர்கள், போலீசார் சிலர் காயமடைந்தனர்.

விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 6போலீசார் காயமடைந்த தாக மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories