சுற்றுலா விசாவில் வந்து மதரசாவில் பணிபுரியும் 800 மதபோதகர்களை வெளியேற்ற இலங்கை அரசு முடிவு!

maithripala sirisena - 2026

800 மத போதகர்களை நாடு கடத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை நாட்டுக்கு சுற்றுலா விசாவில் வந்த சுமார் 800 பேர், சட்ட விரோதமாக மதரஸாக்களில் பணிபுரிந்து வந்தது அம்பலமாகியுள்ளது. அவர்களிடம் நடத்தப் பட்ட தீவிர விசாரணையில், அவர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துவிட்டு, மத போதனையில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. இதை அடுத்து அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

மற்றொரு அம்சமாக, இலங்கையில் ஜாகீர் நாயக்கின் பீஸ் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப் பட்டுள்ளது. இலங்கையில் கிறிஸ்துவர்களைக் குறிவைத்து தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாதி ஜஹ்ரான் தொடர்பு கொண்டிருந்ததாக ஜாகீர் நாயக் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனிடையே, இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் மைத்ரீபால சிறீசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த மே தினக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு பேசிய அவர், இடைக்கால அறிக்கையிலுள்ள விவரங்கள் தொடர்பாக சட்டத் துறையினருடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்தார்.

இந்தக் கொடூரத் தாக்குதலை தடுக்க காவல்துறை தலைவருக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் சந்தர்ப்பம் இருந்தபோதும் அவர்கள் அதனைச் செய்யவில்லை எனவும் அதிபர் சிறீசேன சுட்டிக் காட்டினார். விடுதலைப் புலிகளுடன் போராடியதை போல, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் போராட வேண்டிய நிலை இலங்கைக்கு இல்லை என்று கூறினார் சிறீசேன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories