December 6, 2025, 4:58 AM
24.9 C
Chennai

மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்

சபரிவெங்கட்

பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும் திறமைசாலி.

இவரது திறமையை அறிந்து வியந்த மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் தேசிய விருதினை வழங்கி கவுரவித்தது.வழக்கமாக இந்த விருதினை இந்திய பிரதமர் வழங்குவார், ஆனால் விருது வழங்கும் நாளன்று பிரதமர் மோடி சென்னை வெள்ளத்தை பார்வையிட வந்துவிட்டதால் பிரதமர் சார்பில் அமைச்சகமே விருதினை வழங்கியது.
நடந்த சம்பவத்தை பிரதமருக்கு கடிதமாக எழுதி அனுப்பிய சபரி வெங்கட், உங்கள் கையில் விருது வாங்கவேண்டும், உங்கள் அருகாமையில் இருக்கவேண்டும் என்பது என் கனவு அது நடக்கமுடியாமல் போய்விட்டது என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து சபரி வெங்கட்டிற்கு ஒரு போன் வந்தது.நாளை கோவை வரும் பிரதமர் உங்களை சந்திக்கவிருக்கிறார் விமான நிலையம் வந்துவிடவும் என்று போனில் பேசியவர் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பகல் 12.30 மணி உச்சி வெயிலில் வந்திறங்கிய பிரதமரை வரவேற்க விமானம் அருகே அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் கட்சி வேட்பாளர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரே ஒருவர் சபரி வெங்கட் மட்டுமே.

வேட்பாளர்கள் 11 பேருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் அனைவருககும் வணக்கம் தெரிவித்து ஒரே நிமிடத்தில் அனுப்பிவிட்டார், அடுத்து தனியாக நின்றிருந்த சபரிவெங்கட்டிடம் வந்தார்.

சபரி வெங்கட்டின் துணைக்கு உடன் நின்ற அப்பா சீனிவாஸ் தன் மகன் சபரி வெங்கட் பெயர் சொல்லி பிரதமருக்கு அறிமுகம் செய்துவைக்க, எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் சபரியிடம் பேசஆரம்பித்தார்.சபரி பிரதமரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை பிரதமர் கையில் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

சபரி இந்தியில் பேச, இன்னும் உற்சாமான பிரதமர் சபரிவெங்கட்டின் உயரத்திற்கு குனிந்து அவனது தோளில் கைபோட்டுக்கொண்டு சகஜமாக பேசஆரம்பித்தார்.

தங்களை பார்க்கவேண்டும் என்ற என் கனவு நிறைவேறியது மிக்க நன்றி ஐயா என்ற சபரியிடம் ‘உனது அடுத்த கனவு என்ன?’ என்ற போது ‘ஐஏஎஸ் ஆக வேண்டும் தங்களைப்போல நிர்வாகத்திறமை பெறவேண்டும்’ என்று சொல்லவே நிச்சயம் அது உன்னால் முடியும் நான் உனக்கு உதவுவேன் என்றார்.

எங்கே உன் தனித்திறமையை காட்டு என்றதும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை சுருக்கமாக நிகழ்த்த மனம் நெகிழ்ந்த பிரதமர் சபரியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து பாராட்டினார்.

நீங்களும் சபரிவெங்கட்டிடம் பேசவேண்டுமா? :9788103475.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories