மோடியே உன்னை பிரதமராக பெற்றதற்கு நாங்கள் பாக்கியசாலிகள்

சபரிவெங்கட்

பார்வை குறைபாடு உடைய 13வயது சிறுவன், கோவை ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்.சிறுவயது முதலே சுவாமி விவேகானந்தர் மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக அவரைப்போலவே உடையணிந்து தமிழ்,இந்தி,ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழியில் சொற்பொழிவாற்றுவதில் மிகவும் திறமைசாலி.

இவரது திறமையை அறிந்து வியந்த மத்திய அரசு கடந்த டிசம்பர் மாதம் டில்லியில் தேசிய விருதினை வழங்கி கவுரவித்தது.வழக்கமாக இந்த விருதினை இந்திய பிரதமர் வழங்குவார், ஆனால் விருது வழங்கும் நாளன்று பிரதமர் மோடி சென்னை வெள்ளத்தை பார்வையிட வந்துவிட்டதால் பிரதமர் சார்பில் அமைச்சகமே விருதினை வழங்கியது.
நடந்த சம்பவத்தை பிரதமருக்கு கடிதமாக எழுதி அனுப்பிய சபரி வெங்கட், உங்கள் கையில் விருது வாங்கவேண்டும், உங்கள் அருகாமையில் இருக்கவேண்டும் என்பது என் கனவு அது நடக்கமுடியாமல் போய்விட்டது என்ற தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 5ந்தேதி பிரதமர் அலுவலகத்தில் இருந்து சபரி வெங்கட்டிற்கு ஒரு போன் வந்தது.நாளை கோவை வரும் பிரதமர் உங்களை சந்திக்கவிருக்கிறார் விமான நிலையம் வந்துவிடவும் என்று போனில் பேசியவர் கூறினார்.

கோவை விமான நிலையத்தில் பகல் 12.30 மணி உச்சி வெயிலில் வந்திறங்கிய பிரதமரை வரவேற்க விமானம் அருகே அனுமதிக்கப்பட்ட 12 பேரில் 11 பேர் கட்சி வேட்பாளர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரே ஒருவர் சபரி வெங்கட் மட்டுமே.

வேட்பாளர்கள் 11 பேருடன் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்ட பிரதமர் அனைவருககும் வணக்கம் தெரிவித்து ஒரே நிமிடத்தில் அனுப்பிவிட்டார், அடுத்து தனியாக நின்றிருந்த சபரிவெங்கட்டிடம் வந்தார்.

சபரி வெங்கட்டின் துணைக்கு உடன் நின்ற அப்பா சீனிவாஸ் தன் மகன் சபரி வெங்கட் பெயர் சொல்லி பிரதமருக்கு அறிமுகம் செய்துவைக்க, எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் சபரியிடம் பேசஆரம்பித்தார்.சபரி பிரதமரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட தேசிய விருதினை பிரதமர் கையில் கொடுத்து வாங்கிக்கொண்டார்.

சபரி இந்தியில் பேச, இன்னும் உற்சாமான பிரதமர் சபரிவெங்கட்டின் உயரத்திற்கு குனிந்து அவனது தோளில் கைபோட்டுக்கொண்டு சகஜமாக பேசஆரம்பித்தார்.

தங்களை பார்க்கவேண்டும் என்ற என் கனவு நிறைவேறியது மிக்க நன்றி ஐயா என்ற சபரியிடம் ‘உனது அடுத்த கனவு என்ன?’ என்ற போது ‘ஐஏஎஸ் ஆக வேண்டும் தங்களைப்போல நிர்வாகத்திறமை பெறவேண்டும்’ என்று சொல்லவே நிச்சயம் அது உன்னால் முடியும் நான் உனக்கு உதவுவேன் என்றார்.

எங்கே உன் தனித்திறமையை காட்டு என்றதும் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவை சுருக்கமாக நிகழ்த்த மனம் நெகிழ்ந்த பிரதமர் சபரியின் தலையில் கைவைத்து ஆசீர்வாதம் செய்து பாராட்டினார்.

நீங்களும் சபரிவெங்கட்டிடம் பேசவேண்டுமா? :9788103475.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories