கள்ளக்காதலியின் மேல் எழுந்த சந்தேகத்தால் அவரது பிறப்புறுப்பில் அயன் பாக்ஸ் வைத்து சூடு போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.. கமலேஷ் என்பவர் திருமணமாகி தனது மனைவியுடன் இருந்து வந்துள்ளார். கமலேஷ் வசித்து வந்த பகுதியில் விவாகரத்தான இளம் பெண் ஒருவா் தனியாக வசித்து வந்துள்ளார்.
அந்த இளம்பெண்ணுக்கும் கமலேஷுக்கும் நட்பு ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இவர்களது கள்ளக்காதல் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வந்துள்ள நிலையில்
இவர்களது கள்ளக்காதலுக்கு கமலேஷ் மனைவியும் சம்மதம் தெரிவித்துள்ளார் எனவே கமலேஷ் அந்த இளம்பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென அந்த இளம்பெண்ணின் நடத்தையில் கமலேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கமலேஷ் தனது மனைவியை அழைத்துக்கொண்டு தனது கள்ளக்காதலியிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றி ஒருவரை, ஒருவர் தாக்கி கொள்ள ஆரம்பித்தனார். இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டு தனது மனைவியை அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் அயன் பாக்ஸால் சூடு வைக்க சொல்லியுள்ளார்.
மனைவியும் அதேபோல் செய்ய வலியால் துடித்த பெண் சம்பவ இடத்திலேயே மயங்கினார்.
இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் அங்கிருந்து தப்பியோடினா். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதார்
இதனையடுத்து தப்பி ஓடிய கமலேஷ் மற்றும் அவரது மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



