புதன்கிழமை (மே 15) நேற்று மதியம் ஹைதராபாத் சஞ்சீவய்யா பூங்காவில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இதில் பூங்கா எரிந்து நாசமானது.
கம்போஸ்ட் எருவுக்காக சேகரித்து வைத்திருந்த காய்ந்த புல் குவியல் மீது நெருப்புப் பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சித்தனர்
ஒரே ஒரு தீயணைக்கும் வாகனம் மட்டுமே அங்கு வந்ததால் தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்தப் பூங்காவில் இருந்த பல மரங்களும் செடிகளும் தீயின் வெப்பத்தால் முற்றிலும் கருகின.
நர்சரியில் இருந்த பல செடிகள் எரிந்து சாம்பலாகின மின்சார கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொளுத்தி எடுக்கும் வெய்யில் காரணமாக, செடிகொடிகள் காய்ந்து, தீப்பிடிக்கும் நிலையில் வறட்சியில் உள்ளன.