பேஸ்புக் பதிவால் தொடங்கிய கலவரம்! இலங்கையில் மீண்டும் ஊரடங்கு! சுமார் நூறு பேர் கைது!

hasmar srilanka - 2026

இலங்கையில் ஒரு பேஸ்புக் பதிவால் சிலாபத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் கலவரம் மூண்டது. தொடர்ந்து நிலவிய கலவரத்தாலும் வன்முறைகளாலும் இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப் பட்டது .

சிலாபத்தில் முஸ்லிம் வர்த்தகரின் பேஸ்புக் பதிவால் சிங்கள இளைஞர்கள் கோபமுற்று முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் தொடுத்தனர். .

பேஸ்புக்கில், இன ரீதியான கருத்தொன்றை பதிவிட்ட முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு எதிராக பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது ஹஸ்மார்ஸ் எனும் துணிக்கடையும் சேதமாக்கப்பட்டுள்ளது.

இதனால் சிலாபம் நகரில் பதற்றம் நிலவியது. அப்போது பாதுகாப்புப் படையினர் வானை நோக்கி சுட்டு கலகக் காரர்களை கலைத்தனர். இதை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டம் தீவிரமானது. அப்போது, இப்பகுதியில் புர்கா அணிந்து சென்ற பெண்ணை அப்பகுதி சிங்கள மக்கள் போலீஸில் பிடித்துக் கொடுத்துள்ளார்கள்.

மேலும் சிரிக்காதீர்கள். ஒரு நாள் நீங்கள் அழுவீர்கள்…  என்று ஒரு கருத்தைப் பதிவிட்டிருந்தார் ஹஸ்மார் ஹமீத் என்பவர். இதை அடுத்து கலவரம் மூண்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

srilanka3 - 2026தொடர்ந்து, இலங்கையில் இஸ்லாமியர்களின் கடை வீடுகளை அடித்து நொறுக்கிய நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது!  இந்நிலையில் இலங்கை முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது!

இலங்கையில் அண்மையில் கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்தவ சர்ச்சுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய இந்த தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்!

இந்த நிகழ்வுக்குப் பின்னர் இலங்கையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது! இந்தப் பதற்றநிலை அண்மைக் காலத்தில் படிப்படியாக தணிந்து இயல்பு நிலைக்கு இலங்கை திரும்பி வந்தது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவத் தொடங்கின! இதை அடுத்து இலங்கையின் வடமேற்குப் பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே கலவரம் ஏற்பட்டது! அங்கே முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் அடித்து நொறுக்கப் பட்டன.

பதற்றமான சூழல் ஏற்பட்டதால் சில நகரங்களில் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது! தொடர்ந்து நேற்று காலை ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது! ஆனால் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல் தொடங்கிய நிலையில் கொட்டாரமல்லா என்ற இடத்தில் அமீர் என்பவர் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டார்

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இதை அடுத்து பல பகுதிகளில் மீண்டும் பதற்றநிலை ஏற்பட்டது! போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டது! சமூக வலைதளங்களும் முடக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories