நண்பரின் மனைவியை உல்லாசத்திற்கு இழுத்த மீன் வியாபாரி வெட்டிக்கொலை….!

murder - 2026

நண்பரின் மனைவியை உல்லாசத்திற்கு வற்புறுத்திய மீன் வியாபாரியை கண்டதுண்டமாக வெட்டிக்கொன்ற உறவினா்கள்…!

ஜாலியாக இருக்கலாம் வா என்று முன்னாள் நண்பரான மீன் வியாபாரி அடிக்கடி உறவுக்கு அழைத்துக் கொண்டே இருந்ததால் ஆத்திரமடைந்த பெண் தனது குடும்பத்தினரிடம் கூற, அவர்கள் கொந்தளித்து குடும்பமே சேர்ந்து அந்த மீன் வியாபாரியை கண்டம் துண்டமாக வெட்டி ஜோலியை முடித்துள்ளனர். பெங்களூரில் நடந்த அதிர்ச்சியான சம்பவம்

டிஜி ஹள்ளி ரோஷன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் ஜரார். 38 வயதாகிறது. இவரது குடும்பமும், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் குடும்பமும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர்.

சமீபத்தில் ஏதோ பிரச்சினை காரணமாக பேசிக் கொள்வதை நிறுத்தி விட்டனர். இந்த நிலையில் ஜரார், அந்தப் பெண் தனது கடைப் பக்கம் வரும் போதும் போகும்போதும் பேச்சுக் கொடுத்துள்ளார்.

ஜாலியாக இருக்கலாம் வா என்று கூப்பிட்டு வந்தார். ஆனால் அப்பெண் அதை நிராகரித்து சண்டை போட்டு விட்டு வருவாராம். இப்படியே இது சில நாட்களாக தொடர்ந்து வந்துள்ளது.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

கோபமடைந்த ஜரார் நன்றாக குடித்து விட்டு அப்பெண்ணின் வீட்டிற்குச் சென்று தகாத முறையில் பேசி வம்பு சண்டை இழுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் தனது கணவருக்கும், சகோதரர்களுக்கும் போன் செய்து ஜரார் தம்மிடம் வம்பு செய்வதை கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4. 30 மணி இருக்கும். ஜரார் தனது வீட்டில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்ணின் கணவர் ரிஸ்வான், சகோதரர்கள் முகம்மது இஷாக், முகம்மது கெளஸ், சாதிக், உறவினர்கள் சையத் அகமது, சல்மான் ஆகியோர் சேர்ந்து சரமாரியாக ஜராரை வெட்டிக் கொன்றனர்.

உடல் முழுவதும் விழுந்த வெட்டுக்களால் ஜரார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். தகவல் பரவியதும் போலீஸார் வந்து உடலைக் கைப்பற்றினர்.

தீவிர தேடுதல் வேட்டையில் கொலையாளிகள் அனைவரும் சிக்கினர். குடும்பமே சேர்ந்து மீன் வியாபாரியைக் கொன்று குவித்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories