December 6, 2025, 7:53 AM
23.8 C
Chennai

விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

a raja kanimozhi - 2025

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2004-2009 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதை அடுத்து கடந்த 2010-ல் தனது அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது 2011-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைபெற்றது.

176000 கோடி ரூபாய் என்று சொல்லப் பட்டாலும், பின்னர் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 2017ல் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் விடுவித்தார் நீதிபதி ஓ.பி.சைனி.

இந்நிலையில், இவர்களின் விடுதலையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இருந்தது.

அதை ஒட்டி, தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் மக்களவைக்கு எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1 COMMENT

  1. ஊழ்வினை உரத்துவன் ஊட்டும் . முற்பகல் செயின் பிற பகல் vilayum

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories