விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

a raja kanimozhi - 2026

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2004-2009 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதை அடுத்து கடந்த 2010-ல் தனது அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது 2011-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைபெற்றது.

176000 கோடி ரூபாய் என்று சொல்லப் பட்டாலும், பின்னர் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 2017ல் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் விடுவித்தார் நீதிபதி ஓ.பி.சைனி.

இந்நிலையில், இவர்களின் விடுதலையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இருந்தது.

அதை ஒட்டி, தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் மக்களவைக்கு எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1 COMMENT

  1. ஊழ்வினை உரத்துவன் ஊட்டும் . முற்பகல் செயின் பிற பகல் vilayum

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories