February 22, 2026, 4:07 PM
30.4 C
Chennai

விடாது துரத்தும் 2ஜி ஊழல்: கனிமொழி, ஆ.ராசாவுக்கு மீண்டும் நோட்டீஸ்!

a raja kanimozhi - 2026

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூட்டணி அரசு 2004-2009 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதை அடுத்து கடந்த 2010-ல் தனது அமைச்சர் பதவியிலிருந்து ஆ.ராஜா ராஜினாமா செய்தார்.

அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி மீது 2011-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. அந்த விசாரணையில் 17 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி தலைமையில் நடைபெற்றது.

176000 கோடி ரூபாய் என்று சொல்லப் பட்டாலும், பின்னர் சுமார் முப்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 2017ல் போதிய ஆதாரங்களை சிபிஐ சமர்ப்பிக்கவில்லை எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து அனைவரையும் விடுவித்தார் நீதிபதி ஓ.பி.சைனி.

இந்நிலையில், இவர்களின் விடுதலையை எதிர்த்து, தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ சார்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு இருந்தது.

அதை ஒட்டி, தற்போது நீதிமன்றம் கனிமொழிக்கும், ஆ.ராஜாவுக்கும் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதன் விசாரணை ஜூலை 30 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

தற்போது இருவரும் மக்களவைக்கு எம்.பி.க்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

1 COMMENT

  1. ஊழ்வினை உரத்துவன் ஊட்டும் . முற்பகல் செயின் பிற பகல் vilayum

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories