திருமணமான பெண்களின் புகைப்படங்களை மார்பிங் மூலம் நிர்வாண படங்களாக மாற்றி 50 பெண்களை பலாத்காரம் செய்த காமகொடூரன் கைது; கேரளாவில் பரபரப்பு….!

kerala 2 - 2026‘கேரளாவில் 2021ம் ஆண்டுக்குள் 100 பெண்களை பலாத்காரம் செய்வேன்’ என்று சபதம் எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் கோட்டயம் எஸ்பி ஹரிசங்கரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில், ‘ஒரு இளைஞர் எனது புகைப்படத்தை மார்பிங் செய்து நிர்வாணமாக்கி, அந்த ஆபாச படத்தை என் கணவருக்கு அனுப்பி விடுவதாக மிரட்டி, என்னை பலமுறை பலாத்காரம் செய்தார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

இதையடுத்து, இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த கோட்டயம் அரிப்பரம்பு பகுதியை சேர்ந்த பிரதீஷ் குமார் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பிரதீஷ் குமார் முதலில் தன்னுடைய வலையில் வீழ்த்தவேண்டிய பெண்களை தேர்ந்தெடுப்பார்.

ALSO READ:  ஐபிஎல் 2026: அதிரடி ரன் குவிப்பின் ஆட்டக்களமானது!

பெரும்பாலும் திருமணமான பெண்களுக்கே குறி வைப்பார். பின்னர், வலிய சென்று நட்பை ஏற்படுத்தி கொண்டு, போன் நம்பரையும் வாங்கி கொள்வார்.

அந்த பெண்ணிடம் சகஜமாக பேசி குடும்ப பிரச்னைகளை தெரிந்து கொள்வார்.

இதன் பின் அவரது கணவருக்கு மற்ற பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறி ஏமாற்றுவார்.

இதற்காக பிரதீஷ் குமார் பெண்கள் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கை தொடங்கி, அதில் இருந்து தான் பேசி வரும் பெண்களின் கணவருடன் சாட்டிங் செய்வார்.

இந்த சாட்டிங்கை ஸ்கிரீன் ஷாட் எடுத்து இளம்பெண்ணுக்கு அனுப்பி வைப்பார். இதை பார்த்ததும் தனது கணவனுக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக இளம்பெண் கருதுவார்

இதையடுத்து, குடும்பத்தில்
பிரச்னை ஏற்படும். இதை பயன்படுத்தி அந்த பெண்ணுடன் பிரதீஷ் குமார் நெருக்கமாவார்.

இதன்பிறகு அந்த பெண்ணுடன் வீடியோ சாட்டிங் செய்வார். அதன்மூலம் அந்த பெண்ணின் புகைப்படத்தை அவர் பதிவு செய்து வைத்து கொள்வார்.

பிறகு அந்த புகைப்படத்தை மார்பிங் மூலம் நிர்வாணப் படமாக்குவார்.

ALSO READ:  போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

அந்த படத்தை அவரது கணவருக்கு அனுப்பி வைப்பதாக கூறி இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்வார்.

இப்படி கடந்த 2 வருடங்களில் இவர் 50க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்துள்ளார்.

சமீபத்தில் இவரது வலையில் சிக்கிய ஒரு பெண்ணிடம், ‘நீ எனக்கு 68வது ஆள். 2021க்கு முன் 100 பெண்களை சீரழிப்பேன்’ என்று சபதம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இவரது லேப்டாப்பில் 60 பெண்களின் மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண புகைப்படங்கள் இருந்ததை போலீசார் அதிர்ச்சியடைந்தனா்.

அதனை தொடா்ந்து தீவிர விசாரணைக்கு பின் போலீசார் பிரதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Topics

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories