ஓய்வூதிய பணத்தைக் கேட்டு மாமியார் மீது கொடூர தாக்குதல் நடத்திய மருமகள் கைது…!

kithau 1 - 2026
எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் பெண் அதிகாரியை, அவரது மருமகள் பென்ஷன் பணம் கேட்டு அடித்து துவைத்த வீடியோ வெளியானதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டம் நிவாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை, அவரது மருமகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்ணின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதும், கால் கைகளில் சகட்டுமேனிக்கு கடுமையாக தாக்குவதும் என தன்னால் முடிந்த அளவிற்கு கோபத்தை வயதான பெண்ணிடம் காட்டினார் அந்த மருமகள்.

அடிக்கடி நடக்கும் இந்த சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன் வீட்டின் மாடியில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் வீடியோவில் பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு சம்பவம் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வரை சென்றுள்ளது.

அதிர்சியடைந்த அவர், ‘மிகவும் வருந்தத்தக்க மற்றும் கண்டிக்கத்தக் செயல் இது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல’ என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நடத்தி, அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனா். விசாரணையில்

பாதிக்கப்பட்ட மூதாட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர். தற்போது, மத்திய, மாநில அரசிடம் இருந்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் வாங்கி வருகிறார்.

ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார்.

மருமகளால் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட மருமகளின் பெயர் காந்தா தேவி. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெயர் சந்த் பாய்.

இதுகுறித்து, மகேந்தர்கர் போலீஸ் எஸ்பி சந்திரமோகன் கூறுகையில், ‘‘மூதாட்டியை, தனது மருமகள் சுமையாக நினைத்து தாக்கியுள்ளார்.

மூதாட்டியின் பென்ஷன் பணத்தை கேட்டு, அவரை துன்புறுத்தி உள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூதாட்டி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories