December 6, 2025, 9:11 PM
25.6 C
Chennai

ஓய்வூதிய பணத்தைக் கேட்டு மாமியார் மீது கொடூர தாக்குதல் நடத்திய மருமகள் கைது…!

kithau 1 - 2025
எல்லை பாதுகாப்பு படையைச் சேர்ந்த முன்னாள் பெண் அதிகாரியை, அவரது மருமகள் பென்ஷன் பணம் கேட்டு அடித்து துவைத்த வீடியோ வெளியானதால், தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரியானா மாநிலம் மகேந்தர்கர் மாவட்டம் நிவாஜ் நகர் பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டியை, அவரது மருமகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், கட்டிலில் அமர்ந்திருக்கும் அந்த வயதான பெண்ணின் தலைமுடியை பிடித்து ஆட்டுவதும், கால் கைகளில் சகட்டுமேனிக்கு கடுமையாக தாக்குவதும் என தன்னால் முடிந்த அளவிற்கு கோபத்தை வயதான பெண்ணிடம் காட்டினார் அந்த மருமகள்.

அடிக்கடி நடக்கும் இந்த சம்பவத்தை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், தன் வீட்டின் மாடியில் இருந்து அவர்களுக்கு தெரியாமல் வீடியோவில் பதிவிட்டு, அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ பதிவு சம்பவம் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் வரை சென்றுள்ளது.

அதிர்சியடைந்த அவர், ‘மிகவும் வருந்தத்தக்க மற்றும் கண்டிக்கத்தக் செயல் இது. நாகரிக சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல’ என்று தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று நடத்தி, அந்த பெண்ணை கைது செய்து விசாரித்தனா். விசாரணையில்

பாதிக்கப்பட்ட மூதாட்டி, நேதாஜி சுபாஷ் சந்திரபோசால் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தின் உறுப்பினர். தற்போது, மத்திய, மாநில அரசிடம் இருந்து மாதம் 30,000 ரூபாய் பென்ஷன் வாங்கி வருகிறார்.

ஏற்கனவே இந்திய எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி உள்ளார்.

மருமகளால் தாக்கப்பட்ட அந்த மூதாட்டியை மீட்ட போலீசார், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கைது செய்யப்பட்ட மருமகளின் பெயர் காந்தா தேவி. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் பெயர் சந்த் பாய்.

இதுகுறித்து, மகேந்தர்கர் போலீஸ் எஸ்பி சந்திரமோகன் கூறுகையில், ‘‘மூதாட்டியை, தனது மருமகள் சுமையாக நினைத்து தாக்கியுள்ளார்.

மூதாட்டியின் பென்ஷன் பணத்தை கேட்டு, அவரை துன்புறுத்தி உள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூதாட்டி சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்றார்.

இச்சம்பவம் அப்பகுதயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories