பாஜக.,வில் இணைகிறார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி?!

Published:

Chiranjeevi star - 2026

மெகா ஸ்டார் சிரஞ்சீவி பிஜேபியில் சேரப்போகிறார் என்று தகவல்கள் இப்போது உலா வருகின்றன. அவர், பாஜக., முக்கியத் தலைவர்களை விரைவில் சந்திக்க உள்ளார் என்று கூறப் படுகிறது.

பிரஜா ராஜ்யம் கட்சியைத் தொடங்கி பின்னர் காங்கிரஸுடன் தன் கட்சியைக் கலந்து, காங்கிரஸில் கரைந்து, மாநிலங்களவைக்கு தேர்வாகி, தொடர்ந்து மத்திய சுற்றுலா அமைச்சராகவும் இருந்த மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இப்போது காவித் துண்டு அணியத் தயாராகியிருக்கிறார் என்கிறார்கள்.

அப்படியா என்று ஆச்சரியமாகக் கேட்பவர்களுக்கு, ஆமாம் என்றே அவர் குறித்த அண்மைய குறிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன.

தெலுங்கு மாநிலங்களில் ஆபரேஷன் கமலம் என்ற பெயரில் முக்கிய தலைவர்களுக்கு காவித் துண்டு அணிவித்து கட்சியை பலப்படுத்தி வருகிறது பாஜக.,! அனைத்து சமூகத்தினரையும், அனைத்து பிரிவு மக்களையும் கட்சியில் சேர்ப்பதை லட்சியமாகக் கொண்டு காய் நகர்த்தி வருகிறது பாஜக., என்கிறார்கள்.

chiranjeevi megastar - 2026அதன் ஒரு பகுதியாக, அண்மையில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் நான்கு பேர் பாஜக.,வில் சேர்ந்தார்கள். மேலும் சிலர் பாஜக.,வில் இணைவதற்கு தயாராக வரிசை கட்டி நிற்கிறார்கள்.  முன்னாள் எம்எல்ஏ அம்பிகா கிருஷ்ணா இதில் ஆர்வமாக இருப்பதாகக் கூறப் படுகிறது. அதேபோல் ராயலசீமாவில் பெரிய குடும்பங்கள் கூட பாஜக.,வில் சேர தயாராக உள்ளதாகத்  தெரிகிறது.

ALSO READ:  அந்த 7 போக்குகள் : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

காப்பு இனத் தலைவர்களுள் ஒருவரான சிரஞ்சீவி காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து இருந்து வந்தாலும் கடந்த தேர்தலில் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. கடந்த ஏப்ரல் மாதத்துடன் சிரஞ்சீவியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் முடிந்து போனது.

chiranjeevi cong - 2026தற்போது, ஆந்திரப் பிரதேசத்தில் ஏறக்குறைய 74 தொகுதிகளில் காப்பு இன சமூகம் பலம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் சிரஞ்சீவிக்கு பாஜக.,வின் ஆந்திரப் பிரதேச  தலைவர் பதவிகூட கிடைக்கும் என்று  கூறப் படுகிறது. உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி பாஜக.,வில் சேர்ந்தால் அவருடைய ஸ்டார் இமேஜ் கட்சிக்கு பலம் கொடுக்கும் என்கிறார்கள் பாஜக.,வினர்.

இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும், கடந்த சில நாட்களாக திரைப்படங்கள் மீது கவனம் செலுத்திவரும் சிரஞ்சீவி “சைரா நரசிம்ஹாரெட்டி” பட ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img