ரவுடியிசம் -மண்டையை உடைத்த எம்.எல்.ஏ., தம்பி! வலியில் கதறிய பெண் வன அதிகாரி!

forest officer anita beaten - 2026ஃபாரெஸ்ட் ரேன்ஞ் அதிகாரி அனிதாவின் மண்டையை உடைத்த டிஆர்எஸ் எம்எல்ஏ.,வின் தம்பி கைது செய்யப் பட்டுள்ளார்.

தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக வன இலாகா அதிகாரி எஃப்ஆர்ஓ அனிதா புகார் தெரிவித்ததை அடுத்து  நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.

தெலங்கானாவில் ஆளும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதி எம்எல்ஏ கோனேரு கோனப்பாவின் சகோதரர் கிருஷ்ணா ராவும் அவருடைய ஆதரவாளர்களும் நடத்திய தாக்குதலில் தலையிலும் கையிலும் பலத்த காயம் அடைந்தார்  வனத்துறை அதிகாரி! அவர் பின்னர் ஐதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

ஞாயிற்றுக் கிழமை ஜூன் 30 அன்று நடைபெற்ற இந்தத் தாக்குதல் குறித்து அனிதா ஊடகங்களிடம் விளக்கினார்.

அப்போது அவர், எத்தனையோ உற்சாகத்துடன்  நான் இந்த வேலையில் சேர்ந்தேன். ஒரு பெண் என்றுகூட பாராமல் கம்புகளால் என்னை அடித்தது வருத்தமளிக்கிறது! எனக்கு நடந்தது போல் வேறு யாருக்கும் இனி நடக்கக் கூடாது என்றார் கண்ணீருடன்!

ALSO READ:  தமிழகத்தின் ‘மக்கள் ஆளுநர்’!

அரசியல் செல்வாக்கால்தான் தன்னை அவர்கள் அடித்து துன்புறுத்தினர் என்று வருத்தத்துடன் தெரிவித்தார் அனிதா! மேலும் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் குறினார். தனது   பாதுகாப்புக்கு அரசாங்கம் உறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், விதிகளுக்கு உட்பட்டே, தாம் வனத்துக்குச் சொந்தமான நிலத்தின் பாதுகாப்புக்காகச் சென்றதாகவும்,  நான்கு நாட்களுக்கு முன்பே தான் கிராமத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். வனப்பகுதிகளில் அரசு செய்யப் போகும் நிகழ்வு குறித்து,  தாம் பொதுமக்களிடம் விவரித்ததாகவும், அப்போது எந்த மறுப்பும் தெரிவிக்காத கிராமத்தினர் அரசியல் தலைவர்களின் தூண்டுதலால் அவ்வாறு வன்முறையைக் கையில் எடுத்தனர் என்றும்  கூறினார்.

முன்னதாக, ‘கும்ரம்பீம் ஆஸிஷாபாத்’ மாவட்ட காகஸ்நகர் மண்டலத்தில், ‘சர்சாலா’ வில் வனப் பகுதியில் ஞாயிறு அன்று மரக்கன்றுகள் நடுவதற்காக பூமியை சமன்படுத்தச் சென்றனர் வனத்துறை அதிகாரிகள். அப்போது, வனத்துறை அதிகாரிகள் மீது, கோனேரு கிருஷ்ணராவும் அவரது ஆதரவாளர்களும் தாக்குதல் நடத்தினர்.

ALSO READ:  சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

20 ஹெக்டேர் பரப்பளவுள்ள இடத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏதுவாக சமன் செய்ய டிராக்டர்களுடன் சென்ற தன் மீது உள்ளூர் கிராம மக்களை தூண்டிவிட்டு தாக்குதல் நடத்தியதாக அனிதா குற்றம் சாட்டியுள்ளார்.  இந்த தாக்குதலில் தன் தலையிலும் கையிலும் பலத்த காயமடைந்த அனிதா, ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், டிஆர்எஸ்., கட்சியின் எம்எல்ஏ கோனேரு கோனப்பா கிராம மக்களை தன் இருப்பிடத்துக்கு வரவழைத்து ஊடகங்களிடம் எப்படி எல்லாம் பேச வேண்டும் என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த வீடியோவும் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வனத்துறை அதிகாரி தங்கள் நிலத்திற்கு அவர்களை செல்ல விடாமல் தடுத்ததாக குற்றச் சாட்டு கூறும் படி பாடம் எடுத்தார் அவர்.  தம்பி செய்த தவறை மூடி மறைக்க முயற்சிப்பதாக எம்எல்ஏ.,வை சமூக வலைதளங்களில் வாரிச் சுருட்டினார் நெட்டிசன்கள்!

இதை அடுத்து நிலைமை விபரீதம் ஆகவே, காவல்துறையினர் எம்எல்ஏ வின் தம்பியையும் உடந்தையாக இருந்த 12 பேரையும் கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது.

ALSO READ:  ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories