இந்தக் கிணற்று நீரைக் குடித்தால்… இரட்டைக் குழந்தை பிறக்குமாம்! அதிசய கிராமம்!

well water telangana2 - 2026இது இரட்டைக் குழந்தை கிணறு என்பதுதான் சுவாரசிய செய்தி. இந்தக் கிணற்று நீருக்காக அமெரிக்காவே அடி போடுகிறது என்றால் அதன் மகிமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

இந்த ஊர் கிணற்று நீரைக் குடித்தால் இரட்டை குழந்தை பிறக்குமாம்…. இப்படி இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறார் இந்த மக்கள். இவ்வாறு அசைக்க முடியாத மக்கள் நம்பிக்கைக்கு, என்ன காரணம்?

இந்தக் கிணற்று நீர் குறித்து ஊடகங்களில் செய்தி வெளி வரவே வெகு தொலைவில் இருந்தெல்லாம் இந்தக் கிணற்று நீருக்காக பெண்கள் விரைந்து ஓடி வருகின்றனர்! வரிசை கட்டி மக்கள் நிற்பதைப் பார்த்தால் நமக்கு மலைப்பாகத்தான் உள்ளது.

well water telangana1 - 2026ஆனால்  இந்தச் செய்தியில் எவ்வளவு தூரத்துக்கு உண்மை உள்ளது என்ற எண்ணமும் நமக்கு ஏற்படுகிறது அல்லவா?

கிழக்கு கோதாவரி மாவட்டம் ரங்கம்பேட்டை மண்டலம் ‘தொட்டி குண்ட’ என்ற கிராமத்தில் உள்ள ஒரு கிணறு, இந்தப் பரபரப்புக்கு காரணம் ஆகி உள்ளது. ஆந்திரம், தெலங்கானா என, இரு தெலுங்கு மாநிலங்களில் இருந்தும் இந்தக் கிணற்று நீரைப் பருக ஓடோடி வருகின்றனர் பலர். இது குறித்த செய்தியின் அடிப்படையில் நிலைமையை ஆராய, சர்வதேச ஊடகம் ஒன்று, அந்த கிராமத்துக்கு சென்றது.

சுமார் 4,500 மக்கள்தொகை கொண்ட குக்கிராமம்தான் தொட்டிகுண்ட! இது ஒரு விவசாய கிராமம். மேட்டுப் பயிர் சாகுபடி அதிகம்.

well water telangana4 - 2026பொதுவாக இரட்டைக் குழந்தைகள் பிறப்பது என்பது, மனிதர்கள் வாழ்வில் அரிதுதான். ஆனால், தொட்டிகுண்ட கிராமத்தில் அதிக அளவில் இரட்டைப் குழந்தைகள் பிறந்துள்ளார்கள். கிராமவாசியான அடபா வெங்கடேஷ், கிராமத்தில் சுமார் 110 பேருக்கு மேல் இரட்டை குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, அதற்கு இந்த ஊரில் உள்ள கிணற்று நீரை அருந்துவதுதான் காரணம் என்று நம்பிக்கையுடன் கூறினார். 6 வயது முதல் 60 வயது முதியவர் வரை இந்த கிராமத்தில் இரட்டையர்கள் உள்ளனர். அதனால் இந்த கிராமத்திற்கு தனிச்சிறப்பு வந்துள்ளது.

well water telangana3 - 2026வெளியூர்களில் இருந்து வந்து கிணற்று நீரை டின்களில் நிரப்பி எடுத்துச் செல்வது சர்வ சாதாரணமாக உள்ளது. டிவி சேனல்களில் இது குறித்த செய்தி வெளிவரவே கூட்டம் அதிகமாகிவிட்டது.

ஆனால், ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த மகளிர் மருத்துவம் மற்றும் மகப்பேறியல் நிபுணர் டாக்டர் பத்மஜா, இந்தக் கினற்று நீருக்கும் இரட்டைக் குழந்தைக்கும் தொடர்பு இல்லை என்கிறார்.well water telangana - 2026

இது குறித்த சர்ச்சைகள் தற்போது பரவலாக எழுந்திருப்பினும், கிணற்று நீரின் மகிமைதான் இது என்று மக்கள் பலரும் நம்பிக்கொண்டிருக்கின்றனர். இந்த நம்பிக்கை பலமாகவே, தற்போது அமெரிக்காவுக்கு சோதனைக்காக இந்தக் கிணற்று நீரை அனுப்பும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories