சோலார் பேனல் மோசடி: பழனி மாணிக்கத்துக்கு தொடர்பு என சரிதா நாயர் குற்றச்சாட்டு

Published:

கோவை:

கேரளாவையே உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் மீது சரிதா நாயர் குற்றம் சாட்டியுள்ளார்.

காற்றாலை மோசடி வழக்கிற்காக கோவை நீதிமன்றம் வந்த சரிதா நாயர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, பழனிமாணிக்கத்துக்கு எதிரான ஆதாரத்தை சோலார் கமிஷனிடம் ஒப்படைத்துள்ளேன். முறைகேட்டில் சிக்கிய அரசியல்வாதிகள் 9 பேருக்கு எதிராக ஆதாரம் உள்ளது.

சோலார் பேனல் முறைகேட்டு வழக்கில் கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி முக்கியக் குற்றவாளி என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img