நாங்க பயங்கரவாதிகள் ஆக ஜாகீர்நாயக் பேச்சே காரணம்; பிடிபட்டவா்கள் குற்றச்சாட்டு…..!

IS IS - 2026

மஹராஷ்டிராவில் கைது செய்யப்பட்ட 10 பேரும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்’ என மஹாராஷ்டிராவை சேர்ந்த பயங்கரவாத தடுப்பு படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து பல பேரை கொல்ல சதி திட்டம் தீட்டியிருந்ததாக மஹாராஷ்டிர மாநிலம் அவரங்காபாத் மற்றும் மும்ப்ரா பகுதிகளில் 10 பேரை கடந்த ஜனவரியில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் கைது செய்தனர்.

கைதான அவர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள உம்மத் – இ – முகமதியா என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து அந்த 10 பேர்கள் மீது மும்பை நீதிமன்றத்தில் பயங்கரவாத தடுப்பு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளவதாவது, முகமதியா அமைப்பை சேர்ந்த 10 பயங்கரவாதிகளுக்கும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய பேச்சாளர் ஜாகிர் நாயக்கின் பேச்சுக்களை கேட்டு தான் பயங்கரவாதிகளாக மாறியதாக 10 பேரும் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் வெடிகுண்டுகள் தயாரிப்பு பயிற்சியும் பெற்றுள்ளனர்.

மேலும் மும்ப்ராவில் உள்ள மும்ப்ரேஷ்வரர் கோவிலில் கடந்த டிசம்பரில் திருவிழா ஒன்று நடந்தது.

அந்த திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனா்.

பின்னர் பக்தா்களுக்கு கொடுக்கப்பட இருந்த பிரசாதத்தில் விஷம் கலந்து ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல 10 பயங்கரவாதிகளும் சதி திட்டம் தீட்டியிருந்தனர்.

ஆனால் அந்த திட்டம் வெற்றி பெறவில்லை.
இதனையடுத்து குண்டு வெடிப்புகள் நடத்தி பல ஆயிரக்கணக்கான பக்தா்களை கொல்ல சதி திட்டம் தீட்டிய நிலையில் அவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

பிடிபட்ட அவர்களிடமிருந்து வெடிகுண்டுகள் மற்றும் வெடிகுண்டு தயாரிப்பு பொருட்கள் கொடிய விஷங்கள் ஜாகிர் நாயக்கின் சர்ச்சைக்குரிய பேச்சுகள் அடங்கிய சி.டி. க்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
இவ்வாறு அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

Topics

போர்ச் சூழலிலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நிலையாக இருக்கும்!

மேற்காசியப் போர் நிமித்தம் கொஞ்சம் பாதிப்பு இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.6% என நிலையாக இருக்கும்.

சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

சித்திரை மேஷ விஷு பண்டிகை சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில்...

இஸ்ரேல் பதிலடி: எக்ஸ் கணக்கை டெலிட் செய்து ஓடிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்!

இஸ்ரேலை முற்றிலுமாக அழிக்க வேண்டும் என்ற குவாஜா ஆசிஃபின் அழைப்பு "அதிர்ச்சியளிக்கிறது" என்று பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

பிரதமர் மோடியை முடிக்க சதியா? பீகாரில் கைதானவரிடம் விசாரணை தீவிரம்!

பீகாரின் பக்ஸார் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் கூறப்படும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

இதனால், 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஜூன் 4 ஆம் தேதி (வியாழன் கிழமை) முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.

பிஜேபி., உள்ள வந்துடும்!

இந்த முறை என் டி ஏ கூட்டணியை மட்டுமல்ல மக்களின் அதிருப்தியையும் உங்கள் மீது நீங்கள் சரியாக எடை போடவில்லை. நீங்கள் செய்த தமிழகத் துரோகங்களுக்கு விரைவில் விடை கிடைக்கும்.

மெட்ரோ அரசியல்!

மதுரைக்கு மெட்ரோ குறித்து பட்னவிஸ் பேசியதை வைத்து தி.மு.க., பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறது. அதற்கு பதிலடி தர வேண்டிய தமிழக பா.ஜ., வழக்கம் போல் ஆழ்ந்த துாக்கத்தில் இருக்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories