விமானம் அனுப்புறேன்… நேர்ல வந்து பாருங்க.. பிறகு பேசுங்க..! ராகுலுக்கு காஷ்மீர் ஆளுநர் பதிலடி!

satyapalmalik - 2026

காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்நாள் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் கூறியதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்து கள நிலவரத்தை கவனிக்க, தாம் ஒரு விமானம் அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு “முட்டாள்” போல் பேசிக் கொண்டிருந்த தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரின் நடத்தை குறித்து ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார் ஆளுநர் சத்யபால் மாலிக்.

“ராகுல் காந்தியை இங்கு வருமாறு அழைத்தேன். இங்கு வந்து நிலைமையை கண்காணிக்கவும்! பின்னர் பேசவும்! அதற்காக நான் உங்களுக்கு ஒரு விமானத்தை அனுப்புகிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான நபர், நீங்கள் இப்படி பேசக்கூடாது” என்று மாலிக் கூறினார்.

காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு சத்யபால் மாலிக் பதிலளித்தார்.

ALSO READ:  மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!

முன்னதாக, சனிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரிலிருந்து அங்குள்ள வன்முறைகள் குறித்து சில தகவல்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப் பட்டதில், வகுப்புவாத அல்லது மதவாத கண்ணோட்டம் ஏதும் இல்லை என்றார் ஆளுநர்.

“பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை அகற்றுவது அனைவருக்குமாகவே உள்ளது. லே, கார்கில், ஜம்மு, ராஜோரி-பூஞ்ச் ​​ஆகியவற்றில் அதை அகற்றுவதில் இனவாத கோணம் இல்லை! வகுப்புவாத கோணமும் இல்லை” ன்றார்.

Rahul and chidu - 2026இவ்வாறு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறவில்லை. வெளிநாட்டு பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு, ஒரு முயற்சியை செய்துள்ளன! நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். எல்லா மருத்துவமனைகளும் உங்களுக்காக திறந்திருக்கும், ஒரு நபரையேனும் துப்பாக்கிக் குண்டு தாக்கியிருந்தால், அதை நிரூபிக்கவும். ஆனால் இளைஞர்களால் வன்முறை ஏற்பட்டபோது நான்கு பேர் மட்டுமே கால்களில் தாக்கப்பட்டனர், யாருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

காஷ்மீர் வதை முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், படித்திருந்த போதும் வதை முகாம் என்பதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்றார்.

“அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் 30 முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் அதை ஒரு வதை முகாம் என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் அவசர காலங்களில் மக்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர், ஆனால் யாரும் அவர்களை அதனைச் சொல்லி வதை முகாம்கள் என்று அழைக்கவில்லை. தடுப்புக் காவல் ஒரு வதை முகாமுக்கு சமமா” என்று கேள்வி எழுப்பினார் சத்யபால் மாலிக்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories