December 6, 2025, 2:43 PM
29 C
Chennai

விமானம் அனுப்புறேன்… நேர்ல வந்து பாருங்க.. பிறகு பேசுங்க..! ராகுலுக்கு காஷ்மீர் ஆளுநர் பதிலடி!

satyapalmalik - 2025

காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்நாள் காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் கூறியதற்கு காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக் திங்கள்கிழமை பதிலடி கொடுத்துள்ளார். காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு வந்து கள நிலவரத்தை கவனிக்க, தாம் ஒரு விமானம் அனுப்பி வைப்பதாக அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஒரு “முட்டாள்” போல் பேசிக் கொண்டிருந்த தனது கட்சியின் தலைவர்களில் ஒருவரின் நடத்தை குறித்து ராகுல் காந்தி வெட்கப்பட வேண்டும் என்று கூறினார் ஆளுநர் சத்யபால் மாலிக்.

“ராகுல் காந்தியை இங்கு வருமாறு அழைத்தேன். இங்கு வந்து நிலைமையை கண்காணிக்கவும்! பின்னர் பேசவும்! அதற்காக நான் உங்களுக்கு ஒரு விமானத்தை அனுப்புகிறேன். நீங்கள் ஒரு பொறுப்பான நபர், நீங்கள் இப்படி பேசக்கூடாது” என்று மாலிக் கூறினார்.

காஷ்மீரில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஊடகங்கள் கொடுத்த பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் குறித்த கேள்விக்கு சத்யபால் மாலிக் பதிலளித்தார்.

முன்னதாக, சனிக்கிழமை இரவு ஜம்மு-காஷ்மீரிலிருந்து அங்குள்ள வன்முறைகள் குறித்து சில தகவல்கள் வந்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக உறுதிப்படுத்த வேண்டும் என்றும் ராகுல் கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவு நீக்கப் பட்டதில், வகுப்புவாத அல்லது மதவாத கண்ணோட்டம் ஏதும் இல்லை என்றார் ஆளுநர்.

“பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை அகற்றுவது அனைவருக்குமாகவே உள்ளது. லே, கார்கில், ஜம்மு, ராஜோரி-பூஞ்ச் ​​ஆகியவற்றில் அதை அகற்றுவதில் இனவாத கோணம் இல்லை! வகுப்புவாத கோணமும் இல்லை” ன்றார்.

Rahul and chidu - 2025இவ்வாறு பிரச்னை ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் விரும்புகின்றனர். ஆனால் அவர்கள் அதில் வெற்றிபெறவில்லை. வெளிநாட்டு பத்திரிகைகள் தவறான செய்திகளை வெளியிட்டு, ஒரு முயற்சியை செய்துள்ளன! நாங்கள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம். எல்லா மருத்துவமனைகளும் உங்களுக்காக திறந்திருக்கும், ஒரு நபரையேனும் துப்பாக்கிக் குண்டு தாக்கியிருந்தால், அதை நிரூபிக்கவும். ஆனால் இளைஞர்களால் வன்முறை ஏற்பட்டபோது நான்கு பேர் மட்டுமே கால்களில் தாக்கப்பட்டனர், யாருக்கும் பலத்த காயங்கள் எதுவும் ஏற்படவில்லை” என்று அவர் கூறினார்.

காஷ்மீர் வதை முகாமாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்களே என்ற கேள்விக்கு பதிலளித்த ஆளுநர், படித்திருந்த போதும் வதை முகாம் என்பதன் பொருள் அவர்களுக்குத் தெரியாது என்றார்.

“அது என்னவென்று எனக்குத் தெரியும். நான் 30 முறை சிறைக்குச் சென்றிருக்கிறேன். அப்படியிருந்தும், நான் அதை ஒரு வதை முகாம் என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் அவசர காலங்களில் மக்களை ஒன்றரை ஆண்டுகள் சிறையில் அடைத்தனர், ஆனால் யாரும் அவர்களை அதனைச் சொல்லி வதை முகாம்கள் என்று அழைக்கவில்லை. தடுப்புக் காவல் ஒரு வதை முகாமுக்கு சமமா” என்று கேள்வி எழுப்பினார் சத்யபால் மாலிக்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories