
கேரளாவின் பிரசித்தி பெற்ற புத்தாண்டு பண்டிகையான சித்திரை மேஷ விஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் விசு கனி காணும் விழா இன்று புதன்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றறது
- இன்று ஏப்ரல் 15-ஆம் தேதி அதிகாலை 4:00 மணி முதல் காலை 7:00 மணி வரை பக்தர்கள் விஷு கனி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
- விஷு கனி அலங்காரம்: சுவாமி ஐயப்பனின் கருவறைக்கு முன்பாக கணிக்கொன்றை மலர்கள், நவதானியங்கள், பலாப்பழம், காய்கறிகள், தங்க நாணயங்கள், மற்றும் கண்ணாடி போன்ற மங்கல பொருட்கள் நிரப்பப்பட்ட உருளிகள் வைக்கப்பட்டு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.தரிசனம் செய்த பக்தர்களுக்கு கோவில் தந்திரியும் மேல்சாந்தியும் புத்தாண்டு பரிசாக நாணயங்களை (கைநீட்டம்) தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல் சாந்தி வழங்கினார்கள்.
விஷு பூஜைகளுக்காக ஏப்ரல் 11-ஆம் தேதி மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. ஏப்ரல் 18-ஆம் தேதி வரை நெய்யபிஷேகம், படிய பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
- வழக்கமாக சித்திரை 1-ஆம் தேதி (ஏப்ரல் 14) இந்த விழா நடக்கும். ஆனால் இந்த ஆண்டு சாஸ்திர கணக்குகளின்படி, சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நேரத்தைக் கணக்கிட்டு ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு கணித்து இன்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
லட்சக்கணக்கான பக்தர்கள் “சுவாமியே சரணம் ஐயப்பா” என்ற முழக்கத்துடன் இந்த புனிதமான கனி காணும் தரிசனத்தில் கலந்து கொண்டனர்.
கேரளாவில் பிரசித்தி பெற்ற ஐயப்பனின் படை வீடு கோவில்களான குளத்துப்புழா பாலகன் தர்ம சாஸ்தா கோவில் ஆரியங்காவு அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோவில் மற்றும் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் உட்பட பல்வேறு கோவில் விசு கனி தரிசனம் கைநீட்ட பிரசாதம் வழங்கும் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது சபரிமலை வரும் பக்தர்களுக்கு முக்கிய ஊர்களில் இருந்து பம்பைக்கு நேரடி பஸ் வசதிகளை கேரளா அரசு போக்குவரத்து கழகம் செய்திருந்தது




