தூய்மை இந்தியா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல்காந்தி அடுத்தது ஆரம்பிப்பார் என்று சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறது
ஸ்வச்ச பாரத் அபியான் திட்டத்தின் மூலம், அதாவது தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தின் மூலம் மோடி அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறைகளின் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலம்! வெறும் இரண்டே இரண்டு செங்கல் இருந்தால் போதும் என்ற நிலையில் தேவை இல்லாமல் 800 செங்கற்களை வைத்து கழிப்பறை கட்டப்படுவதாக ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்… என்பதாகக் கூறி, ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இதையும் இணைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்
ரபேல் விமானம் வாங்கும் விவகாரத்தில் எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லாமல் விமானம் மட்டும் பேசப்பட்ட நிலையில் மோடி அரசு அவற்றை மாற்றி முழுமையடைந்த இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் நிறைந்த விமானத்தை பிரான்ஸிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்தது அதை இந்த அளவில் கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்!