சந்திரயான்-2 அனுப்பிய நிலவின் 2வது படம் வெளியீடு..!

Published:

chandrayaan 2 - 2026

நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி நிறுவனம் இஸ்ரோவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திராயன் 2 விண்கலம் கடந்த மாதம் அனுப்பப் பட்டது.

இந்நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி பூமியை படம் எடுத்து இஸ்ரோவின் தரைக் கட்டுப்பாட்டு மையத்திற்கு சந்திரயான் 2 அனுப்பியது. இதனை இஸ்ரோ வெளியிட்டது.

தற்போது சந்திரயான் 2 எடுத்துள்ள 2வது புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவின் தரைப் பரப்பில் இருந்து 4,375 கி.மீ., தொலைவில் இருந்து நிலவின் மேற்பரப்பை ஆக.23 ஆம் தேதி இது படம் எடுத்துள்ளது.

இந்த இரண்டாவது படத்தை இஸ்ரோ இன்று வெளியிட்டது. நிலவின் மேற்பரப்பில், பல பள்ளங்கள் தெரிகின்றன. விண்கற்கள் அல்லது வேற்று கிரக பொருட்கள் அல்லது செயற்கைக்கோள்கள் செயலிழந்து நிலவின் மீது விழும்போது அதன் பாதிப்பு என பல்வேறு காரணங்கள் இதற்கு அலசப் படுகின்றன.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img