முதல்வர் பரிபூரணகுணமடைய பிரபாகரன் எம்.பி சிறப்பு வழிபாடு

Published:

முதலமைச்சர் ஜெயலலிதா பூரணகுணமடைய வேண்டி, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கோவில்களில் வழிபாடு செய்துவருகின்றனர் இதையடுத்து திருநெல்வேலி மாவட்டம் கீழப்பாவூரில் தெப்பக்குளம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது,கோவிலில் 108 அகல்விளக்கு தீபம் ஏற்றி அதிமுகவினர் வழிபட்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை மாவட்டசெயலாளரும், நெல்லை எம்.பி யுமான கே.ஆர்.பி.பிரபாகரன் செய்திருந்தார் ,இதில் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராதா, பேரூர் செயலாளர் பாஸ்கர், மேலவை பிரதிநிகள் ஜெயராமன், கணபதி, அதிமுக பிரதிநிதிகள் கணேசன் ,சரண் டைல்ஸ் சரவணன் ,கூட்டுறவு சங்க தலைவர் சுரேஷ் லிகோரி ,இராமசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகராஜன்,ஆண்டபெருமாள் அம்மாபேரவை சாமிநாதன்,கப்பல்,வையாபுரி மகளிரணி இசக்கியம்மாள்,விஜயராணி ,விஜயாஅன்பரசு,இராமலட்சுமி மற்றும் பெண்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img