மெட்ரோவால் மும்பையின் மதிப்பை இழக்கக் கூடாது: உத்தவ் தாக்கரே!

udhav - 2026

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை ஆளும் பா.ஜனதா – சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பத்திரிகை சாம்னாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் (சிவசேனா) எந்த அதிகாரமும் இன்றி கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தோம். பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும் தவறு என பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தோம்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியை கவிழ்க்க ஒருபோதும் நினைத்தது இல்லை.

இந்த கூட்டணி நிலைத்து இருப்பதற்கு பா.ஜனதா, சிவசேனா இரண்டு கட்சிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் மனதை கட்டுப்படுத்த வேண்டும். தேவையின்றி வேகத்தை அதிகரித்தால் அது விபத்துக்கு வழிவகுத்து விடும். ஏற்கனவே அப்படி ஒரு விபத்து நடந்து உள்ளது என 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட பா.ஜனதா – சிவசேனா கூட்டணி முறிவை குறிப்பிட்டார்

நான் மாநில நலனுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களால் சிறந்த நிர்வாகத்தையும், ஆட்சியையும் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

ALSO READ:  5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சிவசேனா, மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைய உள்ள இடத்தை தான் எதிர்க்கிறது. மற்றவர்களின் கஷ்டத்தில் வளர்ச்சி இருக்க கூடாது. ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை மும்பைவாசிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள். இது எனது கட்சி பிரச்சினை அல்ல.

நமக்கு மெட்ரோ ரெயில் மற்றும் நகரத்தின் வளர்ச்சி தேவை தான். அதற்காக நகரத்தின் அதிக மதிப்புமிக்க ஒன்றை இழந்து விடக்கூடாது. இயற்கை வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கொண்ட உலகின் ஒரே நகரம் மும்பை தான். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories