December 6, 2025, 2:37 AM
26 C
Chennai

மெட்ரோவால் மும்பையின் மதிப்பை இழக்கக் கூடாது: உத்தவ் தாக்கரே!

udhav - 2025

மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற 21-ந் தேதி நடைபெற உள்ள தேர்தலை ஆளும் பா.ஜனதா – சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சந்திக்கின்றன. இந்த நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பத்திரிகை சாம்னாவுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் (சிவசேனா) எந்த அதிகாரமும் இன்றி கடந்த 5 ஆண்டுகளாக அரசாங்கத்தில் இருந்தோம். பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும் தவறு என பட்டதற்கு எதிராக குரல் கொடுத்தோம்.

ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியை கவிழ்க்க ஒருபோதும் நினைத்தது இல்லை.

இந்த கூட்டணி நிலைத்து இருப்பதற்கு பா.ஜனதா, சிவசேனா இரண்டு கட்சிகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் மனதை கட்டுப்படுத்த வேண்டும். தேவையின்றி வேகத்தை அதிகரித்தால் அது விபத்துக்கு வழிவகுத்து விடும். ஏற்கனவே அப்படி ஒரு விபத்து நடந்து உள்ளது என 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது ஏற்பட்ட பா.ஜனதா – சிவசேனா கூட்டணி முறிவை குறிப்பிட்டார்

நான் மாநில நலனுக்காக சமரசம் செய்து கொண்டுள்ளேன். மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களால் சிறந்த நிர்வாகத்தையும், ஆட்சியையும் கொடுக்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

சிவசேனா, மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைய உள்ள இடத்தை தான் எதிர்க்கிறது. மற்றவர்களின் கஷ்டத்தில் வளர்ச்சி இருக்க கூடாது. ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதை மும்பைவாசிகள் அனைவரும் எதிர்க்கிறார்கள். இது எனது கட்சி பிரச்சினை அல்ல.

நமக்கு மெட்ரோ ரெயில் மற்றும் நகரத்தின் வளர்ச்சி தேவை தான். அதற்காக நகரத்தின் அதிக மதிப்புமிக்க ஒன்றை இழந்து விடக்கூடாது. இயற்கை வனப்பகுதியையும், வனவிலங்குகளையும் கொண்ட உலகின் ஒரே நகரம் மும்பை தான். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories