சென்னையில் மோடி: தமிழில் டிவிட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி!

Published:

சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில், சீன அதிபருடனான பேச்சுவார்த்தைகளுக்காக, சென்னையில் வந்திறங்கினார் பிரதமர் மோடி. இதை அடுத்து, தனது மகிழ்ச்சியை டிவிட்டரில் தமிழில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார்.

அவரை விமான நிலையத்துக்குச் சென்று , முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர், அமைச்சர்களுடன் சென்று வரவேற்றனர். மேலும் ஆளுநர் புரோஹித் உடன் சென்று பிரதமரை வரவேற்றார்.

modi received chennai1 - 2026

பின்னர் தமது டிவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளவை…

சென்னை வந்திறங்கியுள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கை தமிழ் நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா -சீனா இடையேயான உறவு இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும். .. என்று தமிழில் பதிவிட்டிருந்தார்.

மேலும், தாம் சென்னையில் வந்திறங்கிய செய்தியைத் தெரிவிக்கும் வகையில், சீன மொழியிலும் டிவிட்டர் பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img