காப்புரிமை விவகாரங்களில் இளையராஜாவுக்கு ஆலோசகராக இருக்கும் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்தி: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தை மக்கள் தவறாகப் புரிந்து கொள்ளக்கூடாது. நோட்டீஸ் அனுப்புவது என்பது வழக்கமான நடைமுறைதான்.
இளையராஜாவின் பாடல்களை அவரது அனுமதியுடன் உரிய ராயல்டி தொகை செலுத்திப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. இதை முறைப்படுத்த வேண்டும் என்பதே நோக்கமாகும். சாதாரண மேடைக்கச்சேரி செய்பவர்களிடமிருந்து ராயல்டி எதுவும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் வணிக நோக்கத்துடன் பாடல்களைப் பயன்படுத்துவோர் அதற்குரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.


