December 5, 2025, 7:41 PM
26.7 C
Chennai

தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும்: 100% மழை பெய்யும் வானிலை மையம் தகவல்


இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள்
மூலமாக மழை பெய்து வருகிறது.

இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும்,
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும்
நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும், அப்போது
சராசரியை காட்டிலும் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு
அரபிக்கடலில் ஏற்பட்ட எதிர் சூறாவளி காரணமாக 2 நாட்களுக்கு முன்பே அந்தமான்
மற்றும் போர்ட்பிளேர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இதனால் கேரளாவிலும் முன்கூட்டியே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அடுத்த மாதம் வழக்கமான நாட்களிலேயே கேரளாவில் தென்மேற்கு பருவமழை
தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 100 சதவீதம் மழை பொழிவு
இருக்குமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தை ஏமாற்றி விட்டது.
தென்மேற்கு பருவ மழை பெய்யும்போது, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அணைகளும் நிரம்பும். நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான அணைகளுக்கும்
நீர்வரத்து அதிகரிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பெய்யும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இந்த ஆண்டு மழை பொழிவு
அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதால் குற்றாலம் சீசனும் களை கட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும்பட்சத்தில் கர்நாடகா, கேரளாவில் உள்ள அணைகள்
அனைத்தும் நிரம்பி வழிந்து, தமிழக அணைகளுக்கும் போதிய நீர் கிடைத்து அவைகளும்
நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்குத்
தென்மேற்கு பருவமழையின் போதுதான் நீர்வரத்து அதிகரிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories