தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கும்: 100% மழை பெய்யும் வானிலை மையம் தகவல்


இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள்
மூலமாக மழை பெய்து வருகிறது.

இதில், தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரையிலும்,
வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையிலும்
நீடிக்கும்.

தென்மேற்கு பருவமழையானது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்
தொடங்கி பின்னர் வடஇந்தியா முழுவதும் பரவும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்றும், அப்போது
சராசரியை காட்டிலும் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அந்தமானில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை
ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு
அரபிக்கடலில் ஏற்பட்ட எதிர் சூறாவளி காரணமாக 2 நாட்களுக்கு முன்பே அந்தமான்
மற்றும் போர்ட்பிளேர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.

இதனால் கேரளாவிலும் முன்கூட்டியே மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் அடுத்த மாதம் வழக்கமான நாட்களிலேயே கேரளாவில் தென்மேற்கு பருவமழை
தொடங்குவதற்கான அறிகுறி தெரிவதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு 100 சதவீதம் மழை பொழிவு
இருக்குமென வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் தமிழகத்தை ஏமாற்றி விட்டது.
தென்மேற்கு பருவ மழை பெய்யும்போது, நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள
அனைத்து அணைகளும் நிரம்பும். நெல்லை மாவட்டத்தின் பெரும்பாலான அணைகளுக்கும்
நீர்வரத்து அதிகரிக்கும்.

மேற்கு தொடர்ச்சி மலையில், மழை பெய்யும் போது குற்றாலத்தில் சீசன் தொடங்கி
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்பரித்து கொட்டும். இந்த ஆண்டு மழை பொழிவு
அதிகம் இருக்கும் என்று கூறப்படுவதால் குற்றாலம் சீசனும் களை கட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை அதிகரிக்கும்பட்சத்தில் கர்நாடகா, கேரளாவில் உள்ள அணைகள்
அனைத்தும் நிரம்பி வழிந்து, தமிழக அணைகளுக்கும் போதிய நீர் கிடைத்து அவைகளும்
நிரம்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக முக்கிய பாசன அணையான மேட்டூர் அணைக்குத்
தென்மேற்கு பருவமழையின் போதுதான் நீர்வரத்து அதிகரிக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories