சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தாடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒற்றுமை ஏற்படுத்தி கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்திட மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழலில் காவிரி நீரில் கழிவு நீரை கலந்துவிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. தமிழகத்திகு காவிரி தண்ணீர் பிரிந்து வருகின்ற பகுதியில் பெங்களூருவின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கால்வாய்கள் வழியாக தமிழகத்திற்குள் திறந்து விடுவதாகவும், மேலும் பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாகவும், மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாகவும் கலந்துவிடுவதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறுபாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்திற்கும்காவிரி நீர் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதரமாக காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகம் ஓட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்துவிடுவதால் பேராபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அவசரகால நடவடிக்கை எடுத்து மத்தியஅரசின் நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பாரத பிரதமரை வலியுறுத்தி மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பிவைத்து காவிரி பாசன பகுதிகள் மற்றும் கழிவு நீர் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கசெய்திட வேண்டும். அதுபோல் தமிழக எல்லையில் வருகின்ற காவிரி தண்ணீரின் தன்மை பற்றி ஆராயவேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்ற பேராபத்துதிலிருந்து தமிழக மக்களை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!
பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
விளையாட்டு
ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
நெல்லை
தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!
தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.
ஆன்மிகக் கட்டுரைகள்
பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!
பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.
சற்றுமுன்
நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!
'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது
விளையாட்டு
ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!
புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
கட்டுரைகள்
மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!
இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.
இந்தியா
தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!
தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

