காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்துவிடும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது: விவசாயிகள் சங்க தலைவர்

சென்னை: காவிரி நீரில் கர்நாடகம் கழிவு நீரைக் கலந்து விடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. கர்நாடக மாநிலக் கழிவுகளை காவிரியில் கலந்தால் தமிழகத்திற்கு பேராபத்து ஏற்படும். இதை உடனே மத்திய அரசு அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தவேண்டும் என்று அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. அதன் தலைவர் பி.ஆர்.பாண்டியன் தமிழக முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்… காவிரியின் குறுக்கே அணைகட்டி தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீரை தடுத்து நிறுத்துகின்ற நோக்கத்தாடு கர்நாடக அரசு செயல்பட்டு வருகின்ற நிலையில் தமிழகத்தில் அனைத்து கட்சிகளையும் ஒற்றுமை ஏற்படுத்தி கர்நாடகத்தின் முயற்சியை தடுத்து நிறுத்திட மத்திய அரசுக்கு அழுத்தத்தை கொடுப்பதற்கு ஏற்ற சூழல் உருவாகி வருகின்றது. இந்த சூழலில் காவிரி நீரில் கழிவு நீரை கலந்துவிடுவதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியளிக்கின்றது. தமிழகத்திகு காவிரி தண்ணீர் பிரிந்து வருகின்ற பகுதியில் பெங்களூருவின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து தினமும் வெளியாகும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவுநீரை கால்வாய்கள் வழியாக தமிழகத்திற்குள் திறந்து விடுவதாகவும், மேலும் பெங்களூருவில் தினசரி பயன்படுத்தப்படும் 1,950 மில்லியன் லிட்டர் நீரில், சுமார் 60 சதவீதம் (889 மில்லியன் லிட்டர்) கழிவுநீர், பினாகினி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் வழியாகவும், மீதமுள்ள 40 சதவீதம் கழிவுநீரானது, அர்காவதி மற்றும் காவிரி கிளைநதிகள் மூலமாகவும் கலந்துவிடுவதாக அம்மாநிலத்தை சேர்ந்த சிறுபாசனத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீர் ஆதாரத்திற்கும்காவிரி நீர் பெரிதும் பயன்பட்டு வருகின்றது. தமிழகத்தில் உள்ள 20 மாவட்டங்களில் வாழும் 5 கோடி மக்கள் குடிநீர் ஆதரமாக காவிரி நீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கர்நாடகம் ஓட்டுமொத்த கழிவு நீரையும் காவிரியில் கலந்துவிடுவதால் பேராபத்து ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் அவசரகால நடவடிக்கை எடுத்து மத்தியஅரசின் நீர் வளத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு பாரத பிரதமரை வலியுறுத்தி மத்திய அரசு அதிகாரிகளை கொண்ட குழு ஒன்றை கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பிவைத்து காவிரி பாசன பகுதிகள் மற்றும் கழிவு நீர் கலப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கசெய்திட வேண்டும். அதுபோல் தமிழக எல்லையில் வருகின்ற காவிரி தண்ணீரின் தன்மை பற்றி ஆராயவேண்டும். கழிவு நீர் கலந்த குடிநீரை பயன்படுத்துவதால் பல்வேறு நோய்தாக்குதலுக்கு உள்ளாகின்ற பேராபத்துதிலிருந்து தமிழக மக்களை காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories