April 28, 2025, 8:54 AM
28.9 C
Chennai

தனிமை முகாமிலிருந்து திரும்புவர்களுக்கு ரூ 1000! நிவாரணமாக ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு!

isolation

தனிமைப்படுத்தும் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் பொதுமக்களுக்கு ரூ1000 நிவாரணம் வழங்க ரூ60 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளான ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மண்டலங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தனிமைப்படுத்துதல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதை தொடர்ந்து, அவர்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும் போது தலா ரூ1,000 நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மே மாதம் அறிவித்திருந்தார்.

அதன்பேரில், தற்போது ரூ 60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வருவாய்த்துறை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேர் வீதம் தனிமைப் படுத்தப்படுகின்றனர். மாதத்தில் 60 ஆயிரம் பேர் வரை தனிமைப்படுத்துதல் முகாம்களில் வைக்கப்படுகின்றனர்.

ALSO READ:  டாஸ்மாக் விபரீதம்: உசிலம்பட்டியில் காவலர் கொலை; சாலை மறியல்!

அந்த 60 ஆயிரம் பேருக்கு தலா ரூ 1000 நிவாரணம் வழங்க ரூ 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் இல்லங்களுக்கு உதவி செய்ய 6720 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தினமும் ரூ 520 வீதம் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ரூ 40.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் 68 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 680 தன்னார்வலர்களுக்கு தினமும் ரூ 500 தினசரி ஊதியமாக வழங்க ரூ 1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தன்னார்வலர் ஒருவருக்கு 10 வீடுகள் வீதம் பாசிட்டிவ் நோயாளிகள் உள்ள வீடுகளை 14 நாட்களும் தினசரி சென்று ஆய்வு செய்வார்கள். அதேபோன்று தனிமைப்படுத்தப்படும் நபர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்கின்றனர்.

இந்த பணிகளுக்கான நிதி மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து விடுவிக்கப்படுகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  மதுரை - குருவாயூர் ரயிலில் பொதுப் பெட்டிகளை குறைப்பதற்கு பயணிகள் எதிர்ப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories