December 6, 2025, 3:59 AM
24.9 C
Chennai

கள்ளக் காதலனுக்காக கணவனைக் கொலை முயற்சி!

Screenshot_2020_0814_110246

கணவனின் ஆணுறுப்பை நசுக்கியே கொல்ல பார்த்தார் காயத்ரி. இது எல்லாத்துக்கும் காரணம் காயத்ரியின் கள்ளக்காதல்தான்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மனைவி காயத்ரி. கணேஷ் ஒரு அமெச்சூர் வீடியோகிராபராக வேலை பார்த்து வருகிறார். காயத்ரிக்கு 31 வயசாகிறது.

இந்நிலையில், போன வாரம் தம்பதி 2 பேரும் வீட்டில் கட்டிலில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது, திடீரென காயத்ரி அலறினர். இதனால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு ஓடிவந்தனர்.

கணேஷ் கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாகவும், அதனால் தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டிவிட்டதாகவும் கதறி அழுதார்

அதனால் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் கணேஷை மீட்டு ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால் கணேஷூக்கு நினைவு திரும்பவேயில்லை. அதனால் 3 மணி நேரம் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது.

அதன்பிறகு ஐசியூவில் வைத்து டாக்டர்கள் தீவிரமான சிகிச்சை தர ஆரம்பித்தனர். இப்போதும் கணேஷ் ஆபத்தான நிலையில்தான் இருக்கிறார். இதுகுறித்து உறவினர்கள் வடசேரி போலீசில் புகார் செய்யவும், விசாரணை நடந்தது. காயத்ரி சொல்வதை பார்த்தால், கட்டிலில் இருந்து கீழே விழுந்தால், மண்டை எப்படி உடையும்? மண்டை ஓடு சேதமாகியிருக்கிறது.. அவர் தலையில் யாரோ பயங்கரமா அடித்திருக்கிறார்கள். கொல்ல முயன்றுள்ளனர் என்ற சந்தேகம் போலீசுக்கு வலுத்தது.

அதுமட்டுமல்ல, கணேஷின் ஆணுறுப்பு நசுக்கப்பட்டுள்ளது, அவரது விலா எலும்பு முறிந்துள்ளது, மர்ம நபர்கள் வீடுபுகுந்து தாக்கியிருக்காங்க. அதனால் காயத்ரியை விசாரிக்க வேண்டும்” என்று உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு பிறகுதான் போலீசார் காயத்ரியிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். இவருக்கு ஒரு கள்ளக்காதலன் இருக்கிறாராம். அவர் பெயர் யாசின்

அவருடன் ஜாலியாக இருக்க கணேஷ் விடவே இல்லையாம். அதனால் கணவரை தீர்த்து கட்ட கூலி படைகளை ஏவி கொலை செய்ய முயன்றுள்ளார் காயத்ரி. இதற்காக 10 லட்சம் ரூபாயை தந்து கூலி படை ரெடி செய்துள்ளார். சம்பவத்தன்று கணேஷ் தூங்கியதும், யாசினுக்கு தகவல் கொடுத்து வரவழைத்துள்ளர்

அதன்பிறகு கூலிப்படையுடன் வந்த யாசின், கணேஷை அடித்து தாக்கி உள்ளனர். வேறு ஒரு பெண்ணுடன் உறவு இருப்பதுபோல சித்தரிக்கவே, ஆணுறுப்பையும் நசுக்கி விட்டு சென்றனராம். இதையடுத்து, விஜயகுமார், கருணாகரன், ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கள்ளக்காதலன் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories