ஐசியு.,வில் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்! அபாயக் கட்டத்தை தாண்டி விட்டாராம்!

Published:

spb-singer
spb-singer

எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில், அவர் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவரது உடல் நிலையில் சீரான முன்னேற்றம் தென்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியானது.

முன்னதாக, கொரோனா நோய் தொடர்பாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கானகந்தர்வ எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை சீரியஸாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருகிறார். அண்மையில் அவருக்கு கோரோனா நோய்த் தொற்று பரவியதால் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

spb-in-ventilator
spb-in-ventilator

ஆனால் நேற்று இரவு அவருடைய உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக ஆனதால் ஐசியூவில் சேர்க்கப் பட்டு, மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது அவருடைய உடல்நலம் கவலைக்கிடமாக உள்ளதாக எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் மருத்துவ அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

பிபி, சுகர் இவற்றோடு கூட கொரோனா நோய் அடையாளங்களும் அதிகமானதால் அவர் மூச்சு விடுவதற்கு மிகவும் சிரமப்படுவதாக தெரிந்தது. இந்த மாதம் 5 ஆம் தேதியிலிருந்து எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்கு மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக ஆனதால் ரசிகர்களோடு கூட குடும்ப அங்கத்தினர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தனக்கு கோவிட் 19 பரவியதாகவும் தன்னை யாரும் போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே தெரிவித்திருந்தார் பாலசுப்ரமணியம். உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் எப்படிப்பட்ட நோய் அடையாளங்களும் இல்லை என்றும் தான் ஓய்வில் இருப்பதால் யாரும் தன்னை போனில் அழைத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இன்று மாலை 6 மணிக்குப் பின்னர் வெளியான செய்தியில் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாகவும், அபாயக் கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கூறப் பட்டது.

spb-condition
spb-condition
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img