லஞ்சம் கேட்டு மாணவரை அறைந்த காவல் அதிகாரி: மாணவர்கள் போராட்டம்

IMG 20170919 WA0020 - 2026

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் மாணவர் நிரஞ்சன். இவர், கடந்த 16-ம் தேதி தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, தேனி ஆனந்தம் சில்க்ஸ் அருகில் வண்டியை நிறுத்திய எஸ்.ஐ அமுதன் மற்றும் இரண்டு காவலர்கள், நிரஞ்சனிடம் லைசன்ஸைக் கேட்டுள்ளனர்.

அதை அவர் எடுத்துக்காட்டிய பின்னர், ‘ஹெல்மெட்டை தலையில் போடாமல் ஏன் கையில் வைத்திருந்தீர்கள்? ஃபைன் கட்டிவிட்டுச் செல்லுங்கள்!’ என்று எஸ்.ஐ அமுதன் கூறியுள்ளார்.

‘அவசரமாக சென்றதால் ஹெல்மட் போட மறந்துவிட்டேன். நான் மருத்துவக் கல்லூரி மாணவன். மருத்துவமனைக்கு உடனே செல்ல வேண்டும்.’ என்று கூறியுள்ளார் நிரஞ்சன்.

‘நீ எல்லாம் டாக்டர் ஆகி என்ன கிழிக்கப் போற? பையில் எவ்வளவு வச்சுருக்க?’ என்று கூறிக்கொண்டே நிரஞ்சனிடம் இருந்த 100 ரூபாயைப் பிடுங்கியுள்ளார் அமுதன்.

100 ரூபாய்க்கு ரசீது போட்டுக்கொடுங்கள் என நிரஞ்சன் கேட்க, ‘ரூல்ஸ் பேசுறீயா
நீ’ என்றவாறு நிரஞ்சனை கன்னத்தில் அறைந்துள்ளார் அமுதன்.

ALSO READ:  விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேனி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி மாவட்ட காவல்துறையினர், சமீப காலமாகவே கண்டதும்அடிக்கும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த முறை பத்திரிகையாளர், காவல் ஆய்வாளரால் தாக்கப்பட்டார். தற்போது மருத்துவ மாணவர்.

எஸ்.ஐ-க்கு சாலை விதிமீறலில் அபராதம் விதிக்க அதிகாரம் இல்லாத சூழலில், அவர் எப்படி நிரஞ்சனின் இருசக்கர வாகனத்தை நிறுத்தலாம். அப்போது அங்கு பணியில் இருக்க வேண்டிய ஆய்வாளர் எங்கு சென்றார்? காவல்துறையினரிடம் அபராத ரசீது கேட்கக்கூடாதா என்ன? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.

மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் நடவடிக்கை எடுப்பாரா அல்லது அமைதியாக இருந்து விடுவாரா?

செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories