December 5, 2025, 4:22 PM
27.9 C
Chennai

கேரளத்தில் முதல்முறையாக பெண்ணுக்கு குண்டாஸ்

கஞ்சா விற்பனையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டிப் பறந்து 10 குண்டாஸ்களைச் சந்தித்தவர் தலைநகர் சென்னையின் கஞ்சா வியாபாரி கிருஷ்ணவேணி.

கிருஷ்ணவேணி போன்ற வியாபாரிகளால் போதையின் பிடியில் சென்னைத் தள்ளாடிக்கொண்டிருக்கிறது.

கேரளத்தின் கொச்சி பறவபுழா பகுதியைச் சேர்ந்த ஷோபா ஜான் என்ற பெண், ஆள்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 26 வழக்குகளில் முதல் குற்றவாளி. இப்போதுதான் முதல் முறையாக குண்டர் சட்டத்தில் கேரள அரசு அவரை ஓராண்டு சிறையில் அடைத்திருக்கிறது.

கேரளாவில் பெண் ஒருவர் முதல்முறை குண்டாஸில் சிறைக்குப் போன வரலாற்றுச் சாதனையும் இவருக்குக் கிடைத்திருக்கிறது. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகளை ஏமாற்றி பாலியல் குற்றத்தில் தள்ளிவிடுவார் என்பதே ஷோபாஜான் மீதான குற்றச்சாட்டு.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஜெயச்சந்திரன் இதில் ஷோபாஜானுக்கு உடந்தையாக இருந்துள்ளார். ஷோபா ஜானுக்கு 18 ஆண்டுகளும் ஜெயச்சந்திரனுக்கு 11 ஆண்டுகளும் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து கேரள நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.IMG 20170922 WA0033 - 2025

சென்னையைப் பொறுத்தவரை குற்றங்களே பயப்படும் அளவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித்தவர் தாதா கிருஷ்ணவேணி ”குண்டர் சட்டத்தில் எத்தனை தடவை உள்ளே போனாங்கன்னு தெரியலே ஆனால், 10 தடவைக்கு மேலே இருக்கும்” என்று யோசித்துச் சொல்கிறார்கள் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட போலீஸார்.

சென்னை கீழ்ப்பாக்கம், டி.பி.சத்திரம் பகுதியில் போதை ஆசாமிகளுக்கும் போலீஸுக்கும் நன்கு அறிமுகமான பெயர் கிருஷ்ணவேணி. ‘பொட்டலம் கிச்சாக்கா’ என்பது கிருஷ்ணவேணியின் ‘நிக்’ நேம் என்கிறார்கள், ஏரியாவாசிகள்.

80 வயதான கிருஷ்ணவேணி, இன்று வரையில் கொஞ்சமும் சலிப்பில்லாமல் தன்னுடைய தொழிலை செய்து வருகிறார். தொழில் வாரிசாகப் பலரைக் குடும்பத்தில் உருவாக்கியிருந்தும், இதுவரையில் குடும்பத்தார் யாரும் சிறை வாழ்க்கையை அனுபவித்த தில்லை என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.

IMG 20170922 WA0032 - 2025ஶ்ர

குண்டர்தடுப்புக் காவல் சட்டம் கொண்டுவரப்பட்ட (1984) ஆண்டே ‘குண்டாஸ்’ சட்டத்தில் ஓராண்டு சிறையிலடைக்கப்பட்டவர் இந்த கிருஷ்ணவேணி. டி.பி.சத்திரம், மங்காதோட்டம், கீழ்ப்பாக்கம், ஓட்டேரி, பேசின்பாலம் போன்ற பகுதிகளில் இன்றளவும் கஞ்சாப் புகையின் நெடி அப்படியேதான் காற்றில் கலந்து இருக்கிறது. இன்னும் கிருஷ்ணவேணிகள் மாறவில்லை, கஞ்சா விற்பனையும் குறையவில்லை, வாங்கும் ஆட்களும் குறையவில்லை.

போதைக்கு அடிமையாகிக் கிடக்கும் ஆசாமிகளால், சிறு சிறு திருட்டுகள் மிக சாதாரணமாக நடக்கிறது. குறிப்பிட்ட இந்தப் பகுதிகளுக்கு இப்போதையத் தேவை, முழுமையான ஒரு கவுன்சலிங் மட்டுமே… அதுதான் மாற்றத்துக்கு ஒரே வழி! அதைத்தான் அரசும் காவல்துறையும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

  • செய்தி… கே.சி.சாமி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories