இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலில் குவிந்த மக்கள்!

kotaikannal
kotaikannal

ஐந்து மாதங்களுக்குப் பிறகு கொடைக்கானல் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் பலரும் ஆர்வமுடன் கார், இருச்சக்கர வாகனங்களில் வந்து கொடைக்கானலில் குவிந்து ரம்மியான இயற்கைச் சூழலை ரசித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன. கடந்த ஐந்து மாதங்களாக ஊரடங்கால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியில்லாத நிலை இருந்தது.

ஊரடங்கில் பல தளர்வுகள் செய்து அறிவிப்பு வெளியிட்டபோதும் சுற்றுலாத் தலங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் கருதி இன்று முதல் கொடைக்கானல் சுற்றுலாத் தலத்திற்கு செல்ல அனுமதிப்பட்டது.

ஆனால், வெளிமாவட்டத்தினர் இ-பாஸ் கட்டாயம் பெறவேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதலே இளைஞர்கள் பலர் இருசக்கரவாகனங்களில் கொடைக்கானல் நோக்கிச் சென்றனர். கார்களில் பலர் குடும்பத்துடன் சென்றனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி அருகேயுள்ள டோல்கேட்டில் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு வெளிமாவட்டத்தினரிடம் இ-பாஸ் கேட்கப்பட்டது. இரு சக்கரவாகனத்தில் வந்த இளைஞர்கள் பலரும் இ-பாஸ் இல்லாமல் வந்திருந்தனர். அவர்கள் கொடைக்கானலுக்குள் செல்ல அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டதில் இ-பாஸ் இன்றி பயணித்த வெளிமாவட்டப் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு ஆதார் உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் காண்பித்து சென்றனர்.

தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான பிரையண்ட் பூங்கா, ரோஜாத் தோட்டம், செட்டியார் பூங்கா உள்ளிட்டவை திறக்கப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முதலில் பிரையண்ட் பூங்காவிற்கு நுழைந்த முதல் சுற்றுலா பயணிக்கு தோட்டக்கலைத் துறையினர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கொடைக்கானல் செல்ல தினமும் ஆயிரம் பேருக்கு மட்டுமே இ-பாஸ் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் அதிகக்கூட்டம் சேர்வது தவிர்க்கப்படவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories