நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதிகளின் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த மலை தமிழக – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள பல்லூயிர் மலைகாடுகளாகும். இந்த மலையில் அதிகளவில் மூலிகைகள், விலை உயர்ந்த மரவகைகள் மற்றும் சந்தண மரங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, சந்தண மரங்களை வெட்டி கடத்துவது போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரியங்காவு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமன்பாறை பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் மரத்துண்டுகளை கட்டி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். தப்பி ஓடியவர்களை வனத்துறையினர்விரட்டியதில் தென்காசி அருகே உள்ள ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த தங்கதுரை மற்றும் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் பிடிபட்டனா;.
அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 23 துண்டுகளாக வெட்டப்பட்ட சந்தண கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய கடையநல்லூரை சேர்ந்த வசந்தகுமார்,செங்கோட்டை அருகே உள்ள கற்குடியை சேர்ந்த இசக்கிதுரை, கோட்டூர்சாமி, புளியங்குடியை சேர்ந்த தவிடன் ஆகிய 4-பேரை வனத்துறையினா; தேடி வருகின்றனர்
கேரள மாநிலத்தில் 127 ஹெக்டேர் கொண்ட இரண்டாவது பெரிய சந்தணக்காடு இந்த கடமன்பாறை பகுதியாகும். இந்த கும்பல் வனப்பகுதியில் முதல் நாள் மரம் வெட்டும் சத்தம் கேட்டு வனத்துறையினர் வந்த போது தப்பி ஓடி விட்டனர் பின்னர் 2 நாட்கள் வனப்பகுதியில் சமையல் செய்து அங்கேயே தங்கி இருந்து மீண்டும் அதே பகுதியில் மரத்தை வெட்டியுள்ளனர்
இவர்கள் இதே போல் அடிக்கடி இந்த தொழிலில் ஈடுபடுவதும், ஏற்கனவே இவர்கள் மீது சந்தண மரம் வெட்டி கடத்திய வழக்கு இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்


