சந்தன மரங்கள் கடத்திய 2 பேர் கைது: 4 பேர் தப்பி ஓட்டம்

நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம், புளியரை பகுதிகளின் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அமைந்துள்ளது. இந்த மலை தமிழக – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள பல்லூயிர் மலைகாடுகளாகும். இந்த மலையில் அதிகளவில் மூலிகைகள், விலை உயர்ந்த மரவகைகள் மற்றும் சந்தண மரங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதிகளில் வன விலங்குகளை வேட்டையாடுவது, சந்தண மரங்களை வெட்டி கடத்துவது போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழக – கேரள எல்லைப்பகுதிகளில் உள்ள வனப்பகுதியில் கேரள வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆரியங்காவு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடமன்பாறை பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் மரத்துண்டுகளை கட்டி கொண்டிருந்தனர்.
வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். தப்பி ஓடியவர்களை வனத்துறையினர்விரட்டியதில் தென்காசி அருகே உள்ள ஊர்மேலழகியான் பகுதியை சேர்ந்த தங்கதுரை மற்றும் புளியங்குடி பகுதியை சேர்ந்த நாராயணன் ஆகிய இருவரும் பிடிபட்டனா;.
அவர்களிடம் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான 23 துண்டுகளாக வெட்டப்பட்ட சந்தண கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர் மேலும் தப்பி ஓடிய கடையநல்லூரை சேர்ந்த  வசந்தகுமார்,செங்கோட்டை அருகே உள்ள கற்குடியை சேர்ந்த இசக்கிதுரை, கோட்டூர்சாமி, புளியங்குடியை சேர்ந்த தவிடன் ஆகிய 4-பேரை வனத்துறையினா; தேடி வருகின்றனர்
கேரள மாநிலத்தில் 127 ஹெக்டேர் கொண்ட இரண்டாவது பெரிய சந்தணக்காடு இந்த கடமன்பாறை பகுதியாகும். இந்த கும்பல் வனப்பகுதியில் முதல் நாள் மரம் வெட்டும் சத்தம் கேட்டு வனத்துறையினர்  வந்த போது தப்பி ஓடி விட்டனர் பின்னர்  2 நாட்கள் வனப்பகுதியில் சமையல் செய்து அங்கேயே தங்கி இருந்து மீண்டும் அதே பகுதியில் மரத்தை வெட்டியுள்ளனர்
இவர்கள் இதே போல் அடிக்கடி இந்த தொழிலில் ஈடுபடுவதும், ஏற்கனவே இவர்கள் மீது சந்தண மரம் வெட்டி கடத்திய வழக்கு இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories