தீடிரென்று தீப்பிடித்த முதல்வரின் பிரச்சார ஜெனரேட்டர் வாகனம்!

cm 1 - 2026

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார ஜெனரேட்டர் வாகனம் தம்மம்பட்டியில் திடீரென தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசம் ஆனது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி இன்று பிரச்சாரம் செய்கின்றார்.

வாழப்பாடி, தம்மம்பட்டி, ஆத்தூரில் இன்று பிரச்சாரத்தினை அவர் மேற்கொள்கிறார்.
தம்மம்பட்டியில் இன்று கெங்கவல்லி வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து நடைபெறூம் பிரச்சார கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்.

இதற்காக தம்மம்பட்டி பேருந்து நிலையம் அருகே மேடை அமைக்கப்பட்டு வருகிறது. பிரச்சாரத்திற்காக சேலத்தில் இருந்து ஈச்சர் லாரியில் பெரிய ஜெனரேட்டர் நேற்று மாலை வந்தது.

Generator vehicle - 2026

பேருந்து நிலையத்தின் அருகே உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே அந்த வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இரவு 8 மணியளவில் திடீரென அந்த வாகனம் தீப்பற்றி எரிந்தது.

உடனே அருகில் இருந்த ஆட்டோக்கள், வாகனங்கள் அகற்றப்பட்டன. அங்கிருந்தவர்கள் கூடி தீயை அணை அணைக்க முற்பட்டனர். அரைமணி நேரத்திற்கு பின்னர் வாகனம் முற்றிலுமாக எரிந்துநாசமாகிவிட்டது.

ஜெனரேட்டர் வாகனத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், ரூ.5 லட்சம் மதிப்புள்ள ஜெனரேட்டர் தீயில் எரிந்து நாசமானது.

முதல்வரின் பிரச்சாரத்திற்காக வந்த வாகனம் தீப்பற்றி எரிந்த சம்பவம் தம்மம்பட்டி மக்களை அதிரவைத்திருக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

Entertainment News

Popular Categories