December 6, 2025, 3:34 PM
29.4 C
Chennai

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.. வதந்திகளை பரப்பாதீர்: இராதாகிருஷ்ணன்!

radhakrishnan
radhakrishnan

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் சில இடங்களில் தட்டுப்பாடு என்று கூறுவது வதந்தி என்றும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. அதே வேளையில் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சில பகுதிகளில் தடுப்பூசி இல்லை என கூறி, தடுப்பூசி போட்டுக்கொள்ள வரும் நபர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளன.

இதுகுறித்துசுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். அப்போது, மத்தியஅரசிடம் இருந்து, தமிழகத்துக்கு ஏப்ரல் 1-ம் தேதி வரை 34 லட்சத்து 5 ஆயிரத்து 800 கோவிஷீல்டு, 5 லட்சத்து 67 ஆயிரத்து 520 கோவேக்சின் என மொத்தம் 39 லட்சத்து 73 ஆயிரத்து 320 தடுப்பூசிகள் வந்துள்ளன.

இதுவரை தமிழகத்தில் மொத்தம் 31 லட்சத்து 14 ஆயிரத்து 623 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 8 லட்சத்து 58 ஆயிரத்து 697 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

3ந்தேதி (இன்று) மேலும், 12 லட்சத்து 90 ஆயிரத்து 790 கோவிஷீல்டு, 4-ம் தேதி 2 லட்சத்து 14 ஆயிரத்து 610 கோவேக்சின் என 15 லட்சத்து 5 ஆயிரத்து 400 தடுப்பூசிகள் வர இருக்கிறது.

இந்த தடுப்பூசி மருந்துகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனால், சில இடங்களுக்கு எடுத்துச்செல்வதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம், மற்றபடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் கிடையாது என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories