மத்தூர் அருகே, பள்ளி மாணவியை கடத்தி, நான்காவதாக திருமணம் செய்ய முயன்ற, உடற்கல்வி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருகே, மேல்செங்கம் அடுத்த, புதியகுயிலத்தை சேர்ந்தவர் சரண்ராஜ், 31; நாகனூர் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர். ஏற்கனவே மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
அதே பகுதியில் தற்போது வசிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை சேர்ந்த, 16 வயது மாணவி, அரசுப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை, சரண்ராஜ் திருமணம் செய்ய எண்ணினார்.
மத்தூரில், கடந்த, 9ல், வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்வதற்காக கடத்தி சென்றார். மாணவியின் சித்தி புகாரின்படி, மத்தூர் போலீசார் சரண்ராஜை கைது செய்தனர்.