கேஜ்ரிவால் இல்லாமல் இன்று கூடுகிறது ஆம் ஆத்மி தேசிய செயற்குழுக் கூட்டம்

Published:

புது தில்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் மூத்த உறுப்பினர்களான யோகேந்திர யாதவ் மற்றும் பிரசாந்த் பூஷண் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்தக் கூட்டத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான அரவி்ந்த் கெஜ்ரிவால் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது. அவருக்கு உடல் நலக் குறைவு இருப்பதாலும், வேறு அலுவலக ரீதியான பணிகள் இருப்பதாலும் அவர் கலந்து கொள்ள மாட்டார் என்று கூறப்பட்டாலும், கட்சியின் மூத்த தலைவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதாகத் தெரிகிறது.

Related articles

Recent articles

spot_img