கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கெட்டாக்கும் திட்டம்: தடை கோரி வழக்கு..?!

hraja interview
hraja interview

தமிழக அறநிலையத்துறை கோயில் நகைகளை உருக்க தடைகோரி வழக்கு தொடரப்படும் என்று பாஜக. மூத்த தலைவர் ஹ. ராஜா தெரிவித்தார்.

அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது… அறநிலையத்துறை நிதியிலிருந்து கல்லூரிகள் கட்டப்பட்டால், மத வழிபாடு குறித்த பாடம் வைக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் கருத்து. அதை தமிழக அரசு செயல்படுத்துமா?!

கோயில் நகைகளை உருக்கக்கூடாது என்று, விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். அறநிலையத்துறை சிறப்பாக செயல்படவும், தமிழகத்தில் காணாமல் போன 8000 கோயில்களை மீட்டெடுப்பதற்கு அமைச்சர் சேகர்பாபுவை நான் சந்திக்க தயார்… என்று கூறினார்.

narayanan-thirupathi
narayanan-thirupathi

கோயில் நகைகள் உருக்குதல் தொடர்பில்… பாஜக., செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட கருத்து:

கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி வங்கியில் சேமிக்கக்கூடாதா?

தாராளமாக சேமிக்கலாம். ஆனால், அதை செய்ய வேண்டியது கோவில்கள் தானே தவிர, அரசுக்கு உரிமை இல்லை.

திருப்பதி கோவில், சோம்நாத் கோவில் போன்ற பல்வேறு கோவில்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்களே?

ஆமாம். உண்மை தான். ஆனால் அந்த நகைகள் அந்தந்த கோவில்களின் சொத்தாக தான் இருக்கும். அந்த நகைகளை வங்கியில் சேமிப்பதன் மூலம் கிடைக்கும் வட்டி வருவாய் அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்கு தான் உபயோகிக்கப்படும்.

தமிழக அரசு சொல்வது என்ன?

தமிழகத்தில் உள்ள பல கோவில்களிலிருக்கும் தங்க நகைகளை உருக்கி மொத்தமாக அவற்றை வங்கியில் சேமித்து அதில் கிடைக்கும் வட்டி வருவாயை அனைத்து கோவில்களுக்கும் செலவு செய்வோம் என சொல்கிறது.

இதை ஏன் செய்யக்கூடாது?

கோவில் சொத்துக்களுக்கு அந்தந்த கோவில்களில் குடியிருக்கும் தெய்வங்களே சொந்தக்காரர் என்று சட்டம் சொல்கிறது. இதை உச்சநீதி மன்றம் பலமுறை உறுதிப்படுத்தியுள்ளது. (Deity is the owner of the Temple). தி மு க அரசு கூறுகிற திட்டத்தின் அடிப்படியில் கோவில் சொத்துக்கள் பொது சொத்துக்களாக கருதப்பட்டு ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் சென்று அரசுக்கு சொந்தமாகி விடும். அதாவது கோவில் சொத்துக்களை அரசு மறைமுகமாக கையகப்படுத்தும் முயற்சியே இது.

மக்களுக்கு இது எப்படி பாதகமாகும்?

மக்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றவே குறிப்பிட்ட கோவிலுக்கு/தெய்வத்திற்கு காணிக்கை செலுத்துகின்றனர். அப்படி செலுத்தப்பட்ட காணிக்கைகளை அந்த கோவிலின் மேம்பாட்டுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதே நியதி. பொது செலவு என்ற திட்டம் அமல்படுத்தப்பட்டால் மக்கள் கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதை நிறுத்தி விடும் வாய்ப்பு உள்ளது.

இது சட்ட விரோதமா?

ஆம்! ஹிந்து அறநிலைய துறை என்பது கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் ஒரு அமைப்பே. அதற்கு மேல் கோவில் நிர்வாகத்தில் அதற்கு அதிகாரமில்லை. அறங்காவலர்கள் தான் நிர்வாகத்தை நடத்த வேண்டும். அப்படி நிர்வாகத்தில் முறைகேடுகள் அல்லது இடர்பாடுகள் எழும் போது அதை சரிசெய்து சீரமைக்கும் பணி மட்டுமே ஹிந்து அறநிலையத்துறையின் பணி. கோவில் சொத்துக்களுக்கு முழு உரிமையும் அந்த கோவிலில் இருக்கும் தெய்வத்திற்கு மட்டுமே. ஒரு சிறு துரும்பின் மீது கூட அரசுக்கு உரிமையில்லை. பல கோவில்களிலிருந்து தங்கத்தை எடுத்து உருக்கி, வங்கியில் சேமித்து அதை பல கோவில்களுக்கு செலவு செய்ய அரசுக்கு உரிமையோ, அதிகாரமோ உறுதியாக இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories