பொதுவாக குழந்தைகள் செய்யும் அனைத்து விதமான குறும்புகளை யாரும் வெறுக்கமாட்டார்கள், குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அனைவரும் ரசித்து கொண்டிருப்பார்கள்.
குழந்தைகளின் செயல்கள் சீக்கிரம் இணையவாசிகளை கவர்ந்துவிடும். அப்படி ஒரு குழந்தையின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த குழந்தை பல நேரங்களில் விதவிதமான இனிப்பு பண்டங்களை பெற்றோர்களிடம் வாக்குவாதம் செய்து வாங்க முற்படுகிறது.
karaleopior என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், ஒரு குழந்தை உணவருந்த அதன் டேபிளில் அமர்ந்துகொண்டு அதன் தாயிடம் கூடுதலாக இனிப்பு சுவை கொண்ட சிரப்பை கேட்கிறது, அந்த இனிப்பு சிரப்பை என் கைகளால் நான் சுவைத்து சாப்பிட வேண்டும், எனக்கு பேன்கேக் வேண்டாம் கூடுதலாக அந்த சிரப் தான் வேண்டும் என்று கேட்கிறது.
அடுத்த கிளிப்பில் அந்த குழந்தை அழகாக உடை அணிந்துகொண்டு எனக்கு கூடுதலாக இன்னொரு ஜிஞ்சர் குக்கி வேண்டும் என்று தனது தாயிடம் வம்பு செய்கிறது.
அடுத்த க்ளிப்பில் அந்த குழந்தை டேபிளில் அமர்ந்து கொண்டு எனக்கு கத்தியில் கூடுதலாக தேன் வைக்க வேண்டும் என்று கேட்கிறது. பின்னர் அக்குழந்தை அதன் தந்தையிடம் இது உங்களுடைய கேக் இல்லை, இது எனக்கு வேண்டும் என்றும் உங்களுக்கு மட்டும் இனிப்பு எடுத்துக்கொள்கிறீர்கள் எனக்கு மட்டும் இல்லையா என்று வம்பு செய்கிறது.
இறுதியாக சில சாக்லேட்டுகளை பார்த்து அந்த குழந்தை மகிழ்ச்சியடைந்து பூம் ஷக்கலக்கா என்று உற்சாகத்துடன் கூறுகிறது. குழந்தையின் இந்த செயல் இணையத்தில் பார்த்த பலரையும் கவர்ந்து இருக்கிறது.
இதுவரை இந்த வீடியோவை 838k பாரவையாளர்களை கடந்ததோடு, 100k லைக்குகளையும் பெற்று ட்ரெண்டாகி வருகிறது. குழந்தையின் செயலால் உற்சாகமடைந்த நெட்டிசன்கள் குழந்தையின் பேச்சுத்திறனையும், குறும்புத்தனத்தையும் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.