திருவண்ணாமலை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக இன்று நடைபெற்ற மாநில அளவிலான மனிதநேய வார நிறைவு நாள் விழாவில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன், அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி, முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, MLA,மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எஸ்.கந்தசாமி ஆகியோர் கலந்துக் கொண்டனர். விழாவில் அமைச்சர் ராஜலெட்சுமி, பேசியதாவது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு சமுகம், கல்வி, பொருளாதாரம், இவற்றில் மேபட்ட நிலை அடைய திட்டங்களை தீட்டி நிதி ஒதுக்கி பாடுபட்டு வருகிறது. ஆதிதிராவிட மக்கள் வளர்சிக்கு தமிழக அரசு ரூபாய் 3,281.35 கோடி ஒதுக்கியுள்ளது.
விழாவில் பேசிய தூசி மோகன், அதிமுக MLA , நிகழ்ச்சியில் கலந்துகொண்ட திமுக MLA கு.பிச்சாண்டியை பார்த்து அன்பு நண்பர் என புன்னகையோடு வரவேற்றார்.
இரண்டு அமைச்சர்களும் முதல்வர் எடப்பாடி ஆட்சியை புகழ்ந்து பேசினார்கள்.