சேலம் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு
குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்ட 10 பேரும் மதுரை மாவட்ட வன்கொடுமை சிறப்பு நீதிமன்றத்திற்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.
நாங்கள் நிரபராதிகள், எந்த குற்றமும் செய்யவில்லை என நீதிபதி சம்பத்குமார் முன் குற்றவாளிகள் யுவராஜ் உள்பட 10 பேரும் தெரிவித்துள்ளனர்.
என் மகனுக்கு நேர்ந்தது போன்ற கொடுமை யாருக்கும் நடக்க கூடாது: கோகுல்ராஜின் தாய் சித்ரா நீதிபதியிடம் தெரிவித்தார்.
இந்தநிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கு தீர்ப்பு பிற்பகலுக்கு மேல் ஒத்திவைப்பட்டது.
அவர்களுக்கான தண்டனை விபரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
கோகுல்ராஜ் கொலைவழக்கு தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைப்பு…

Published:

