காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

kantchi - 2026

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவனைப்பாடி இடக்கண் பெற்ற பெருமைக்குரியதும், பழைமை வாய்ந்தது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில். இங்கு பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து கோயில் சிவனடியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினார்கள்.

ஏலவார்குழலி அம்மனும், ஏகாம்பரநாதரும் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே வந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமியும்,அம்மனும் பவளக்கால் சப்பரத்தில் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தனர்.

கொடியேற்று விழாவில் தொண்டை மண்டல ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் செயல் அலுவலர் ந.ஜெயராமன், கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வாளர் பிரித்திகா, இணை ஆணையா் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலெட்சுமி யுவராஜ் மற்றும் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனர். விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வரவுள்ளனர்.

முக்கிய நிகழ்வாக வரும் 13- ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருக்கூட்ட வீதியுலாவும், இரவு வெள்ளித்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 14-ஆம் தேதி திங்கள்கிழமை ஏலவார்குழலியும், ஏகாம்பரநாதரும் தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறும்.

தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தேரோட்ட நாளன்று இரவு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நாளான வரும் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி தீர்த்தவாரியும், 21- ஆம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

தினசரி இரவு சைவ சமயச் சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள், தேவார பாராயணம், நாகஸ்வரக் கச்சேரிகள் ஆகியனவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி என்ற இந்திய தேசியத்தின் அடிப்படை. பாரதிய ஜனதா கட்சியில் அதை நடைமுறைப்படுத்துவதில் எழுந்த சிக்கலுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

Entertainment News

Popular Categories