காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்!

kantchi - 2026

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதாகவும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவனைப்பாடி இடக்கண் பெற்ற பெருமைக்குரியதும், பழைமை வாய்ந்தது காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோயில். இங்கு பங்குனி உத்திரத் திருக்கல்யாணப் பெருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கோயில் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. இதனைத் தொடர்ந்து கோயில் சிவனடியார்கள் கொடிமரத்தில் கொடியேற்றினார்கள்.

ஏலவார்குழலி அம்மனும், ஏகாம்பரநாதரும் அலங்கார மண்டபத்திலிருந்து சிறப்பு அலங்காரத்தில் கோயில் கொடிமரம் அருகே வந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சுவாமியும்,அம்மனும் பவளக்கால் சப்பரத்தில் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தனர்.

கொடியேற்று விழாவில் தொண்டை மண்டல ஆதீனம் தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், அறநிலையத் துறை உதவி ஆணையர் ஆ.முத்துரெத்தினவேலு, கோயில் செயல் அலுவலர் ந.ஜெயராமன், கண்காணிப்பாளர் சீனிவாசன், ஆய்வாளர் பிரித்திகா, இணை ஆணையா் அலுவலக கண்காணிப்பாளர் ராஜா, செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலெட்சுமி யுவராஜ் மற்றும் சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

மாலையில் சுவாமி சிம்ம வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் வீதியுலா வந்தனர். விழாவையொட்டி தினசரி காலையும், மாலையும் சுவாமியும், அம்மனும் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளில் திருவீதி உலா வரவுள்ளனர்.

முக்கிய நிகழ்வாக வரும் 13- ஆம் தேதி 63 நாயன்மார்கள் திருக்கூட்ட வீதியுலாவும், இரவு வெள்ளித்தேர் உற்சவமும் நடைபெறுகிறது. மறுநாள் 14-ஆம் தேதி திங்கள்கிழமை ஏலவார்குழலியும், ஏகாம்பரநாதரும் தேரில் பவனி வரும் நிகழ்வு நடைபெறும்.

தேரோட்ட ஏற்பாடுகளை திருவேகம்பன் சிவாலய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர். தேரோட்ட நாளன்று இரவு மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பங்குனி உத்திர நாளான வரும் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 20-ஆம் தேதி தீர்த்தவாரியும், 21- ஆம் தேதி 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

தினசரி இரவு சைவ சமயச் சொற்பொழிவுகள், நாட்டிய நிகழ்ச்சிகள், தேவார பாராயணம், நாகஸ்வரக் கச்சேரிகள் ஆகியனவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ALSO READ:  IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories