முதுநிலை படிப்புகளான எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ போன்ற முதுநிலை பொறியியல் படிப்புகளை படிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
இது குறித்து டான்செட் அமைப்பு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2022 கல்வி ஆண்டில் சேருவதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 21 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் , ஆர்வமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்களை tancet.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களில் 10ம் மற்றும் 12ம் வகுப்பின் பதிவு எண் , சாதி மற்றும் இருப்பிடச் சான்றிதழ், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.
அத்துடன் புகைப்படம், தேவையான ஆவணங்கள் மற்றும் கையொப்பம் அனைத்தையும் சரியான முறையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் மிகுந்த கவனத்துடன் விவரங்களைப் பதிவு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு திருத்தம் மேற்கொள்ள முடியாது அது குறித்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
tancet.annauniv.edu. என்ற அதிகாரபூர்வமான இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
TANCET 2022 registration என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த உடன் ஒரு புதிய பக்கம் தோன்றும்
தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, விண்ணப்பத்தை பதிவிட வேண்டும்.
விண்ணப்பத்துக்கான கட்டணம் ஆன்லைன் மூலமே செலுத்தப்பட வேண்டும். விண்ணப்பப் படிவத்தின் ஒரு காப்பியை பிரின்ட் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
கடைசி நாள் வரை ஒத்தி போட்டால் தொழில்நுட்பச் சிக்கல்கள் உருவாக வாய்ப்புக்கள் அதிகம்.இதனால் காலதாமதம் இன்றி உடனடியாக விண்ணப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளது.