10,11,12 பொதுத்தேர்வு: முக்கிய எச்சரிக்கை விடுத்த தேர்வுத்துறை!

Published:

- 2026

தமிழகத்தில் எந்தவித புகாருக்கும் இடம் தராமல் பொது தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத் தேர்வு நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 லட்சம் மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் மறுபக்கம் தேர்வு நெருங்கி வருவதால் தேர்வு மையம் அமைக்கும் பணியில் தேர்வுத் துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் தேர்வு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்வில் காப்பி அடித்தல், ஆள் மாறாட்டம், வினாத்தாள் லீக் உள்ளிட்ட எவ்வித புகாரும் இடம் தராமல் பொதுத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும்.

ஏதேனும் தவறு ஏற்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் பொதுத்தேர்வில் எந்த மாணவருக்கும் ஹால்டிக்கெட் வழங்காமல் நிறுத்தி வைத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Related articles

Recent articles

spot_img