![கண் திறந்த அம்மன்! பக்தர்கள் பரவசம்! 1 202112101417151262 Tamil News Mandaikadu Bhagavathi Amman Temple pooja on today MEDVPF](https://dhinasari.com/wp-content/uploads/2022/03/202112101417151262_Tamil_News_Mandaikadu-Bhagavathi-Amman-Temple-pooja-on-today_MEDVPF.jpg)
கோவை காமராஜபுரம், ஹவுசிங் காலனியில் அருள்மிகு தேவிஸ்ரீ பூமாரியம்மன் கோவில் உள்ளது.
சுமார், 40 ஆண்டு கால பழமையான கோவிலில் புனரமைப்பு பணிக்காக இரு நாட்களுக்கு முன் கணபதி ஹோமம் நடந்தது. இதனால் அருகேயுள்ள பக்தர் வீட்டில் அம்மன் சிலை வைத்து பூஜிக்கப்பட்டது.
நேற்று மாலை பெண் ஒருவர் பூமாரியம்மனுக்கு தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.
அச்சமயம் திடீரென அம்மன் சிலையில் கண் திறந்து காட்சியளித்ததாக தகவல் பரவியது. தகவலறிந்த அப்பகுதியை சேர்ந்த மக்கள் அம்மனை தரிசிக்க திரண்டனர்