காணமல் போன குட்டி.. கண்ட தாயின் கண்களில் What a Expression.!

sloth - 2026

பல வித வினோத வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

பாசப்பிணைப்பையும் உதவியின் வலிமையையும் காட்டும் ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூமியில் உள்ள மிக மெதுவான மற்றும் அழகான விலங்குகளில் ஒன்றான ஸ்லாத் (sloth) எனப்படும் விலங்கின் வீடியோ இது. இந்த விலங்கை பலர் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.

தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் விலங்கு இது. நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிகவும் மெதுவாகவே நகரும் என்பதாலும் இதை “அசையா” கரடி என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்லாத், தனது குழந்தையுடன் மீண்டும் இணையும் மனதைக் கவரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி இன்று உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். இந்த வீடியோவை ஜாகுக்வார் மீட்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஜாகுவார் மீட்பு மையம், வன விலங்குகளை மீட்பது, விடுவிப்பது மற்றும் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது என பல பணிகளை செய்துவரும் அமைப்பு. இந்த அமைப்பு, தங்கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டது.

இந்த வீடியோவை நெட்டிசன்கள் மற்ற தளங்களிலும் மறுபகிர்வு செய்து வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ பல சமூக ஊடகங்களிலும் வைரலாகிறது.

தாய் ஸ்லாத், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர், அதன் குழந்தையைக் கொண்டு வந்து அருகில் காட்டும்போது, குட்டியை அடையாளம் கண்டு கொள்கிறது தாய்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 81 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு கமெண்டுகளை பதிவிட்டிருக்கின்றனர்.

ஜாகுவார் மீட்பு மையம் அவர்களின் பதிவில், “இந்த தாயையும் குழந்தையையும் மீண்டும் இணைக்க முடிந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மே 10 ஆம் தேதி, ஊழியர்களில் ஒருவர் குழந்தை கடற்கரைக்கு அருகில் தரையில் அழுவதைக் கண்டார். அம்மா மரத்தில் இருந்தது, ஆனால் அது மர உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. எனவே, குட்டி ஸ்லாத்தை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்து, அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்துக் கொண்டோம்.

அதன்பிறகு குழந்தையின் அழுகையைப் பதிவுசெய்து, அம்மாவின் கவனத்தை ஈர்க்க மரத்தின் அருகே சென்று விளையாடினோம், அம்மா குழந்தைக்காக வரும் வரை நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இறுதியில் அம்மாவிடம் சேர்த்துவிட்டோம்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு JRC இந்த முறையை உருவாக்கியது, அம்மா மற்றும் குட்டி ஸ்லாத்களை மீண்டும் இணைக்க ஒவ்வொரு முறையும் இதேபோன்ற வழிமுறையை பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு முறையும் ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் மீண்டும் இணைவதைக் காணும் போது அது எங்கள் இதயத்தை உருக்குகிறது, “என்று விலங்குகள் நல அமைப்பின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories