காணமல் போன குட்டி.. கண்ட தாயின் கண்களில் What a Expression.!

sloth - 2026

பல வித வினோத வீடியோக்கள் வைரல் ஆகின்றன. அதிலும் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகின்றன.

பாசப்பிணைப்பையும் உதவியின் வலிமையையும் காட்டும் ஒரு சுவாரசியமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பூமியில் உள்ள மிக மெதுவான மற்றும் அழகான விலங்குகளில் ஒன்றான ஸ்லாத் (sloth) எனப்படும் விலங்கின் வீடியோ இது. இந்த விலங்கை பலர் இதுவரை பார்த்திருக்க மாட்டார்கள்.

தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் விலங்கு இது. நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிகவும் மெதுவாகவே நகரும் என்பதாலும் இதை “அசையா” கரடி என்றும் அழைக்கிறார்கள்.

ஸ்லாத், தனது குழந்தையுடன் மீண்டும் இணையும் மனதைக் கவரும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த காணொளி இன்று உங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைக்கும். இந்த வீடியோவை ஜாகுக்வார் மீட்பு மையம் வெளியிட்டுள்ளது.

ஜாகுவார் மீட்பு மையம், வன விலங்குகளை மீட்பது, விடுவிப்பது மற்றும் மறுவாழ்வு அமைத்துக் கொடுப்பது என பல பணிகளை செய்துவரும் அமைப்பு. இந்த அமைப்பு, தங்கள் அதிகாரப்பூர்வ Instagram பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டது.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

இந்த வீடியோவை நெட்டிசன்கள் மற்ற தளங்களிலும் மறுபகிர்வு செய்து வருகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் இந்த வீடியோ பல சமூக ஊடகங்களிலும் வைரலாகிறது.

தாய் ஸ்லாத், மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஒருவர், அதன் குழந்தையைக் கொண்டு வந்து அருகில் காட்டும்போது, குட்டியை அடையாளம் கண்டு கொள்கிறது தாய்.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 1.6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 81 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் உணர்ச்சிவசப்பட்டு கமெண்டுகளை பதிவிட்டிருக்கின்றனர்.

ஜாகுவார் மீட்பு மையம் அவர்களின் பதிவில், “இந்த தாயையும் குழந்தையையும் மீண்டும் இணைக்க முடிந்தது என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மே 10 ஆம் தேதி, ஊழியர்களில் ஒருவர் குழந்தை கடற்கரைக்கு அருகில் தரையில் அழுவதைக் கண்டார். அம்மா மரத்தில் இருந்தது, ஆனால் அது மர உச்சிக்கு சென்று கொண்டிருந்தது. எனவே, குட்டி ஸ்லாத்தை கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதித்து, அதன் ஆரோக்கியத்தை உறுதி செய்துக் கொண்டோம்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

அதன்பிறகு குழந்தையின் அழுகையைப் பதிவுசெய்து, அம்மாவின் கவனத்தை ஈர்க்க மரத்தின் அருகே சென்று விளையாடினோம், அம்மா குழந்தைக்காக வரும் வரை நாங்கள் பொறுமையாகக் காத்திருந்தோம். இறுதியில் அம்மாவிடம் சேர்த்துவிட்டோம்” என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

“சில ஆண்டுகளுக்கு முன்பு JRC இந்த முறையை உருவாக்கியது, அம்மா மற்றும் குட்டி ஸ்லாத்களை மீண்டும் இணைக்க ஒவ்வொரு முறையும் இதேபோன்ற வழிமுறையை பயன்படுத்துகிறோம்.

ஒவ்வொரு முறையும் ஒரு தாயும் அவளுடைய குழந்தையும் மீண்டும் இணைவதைக் காணும் போது அது எங்கள் இதயத்தை உருக்குகிறது, “என்று விலங்குகள் நல அமைப்பின் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories