இஸ்ரேலியர்கள் – பாலஸ்தீனர்கள் இடையே மோதல்

ஜெருசலேம் நாள் கொண்டாட்டத்தின் போது இஸ்ரேலியர்கள் – பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்து 1947-ம் ஆண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளாக பிரிக்கப்பட்டது.

இஸ்ரேல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், நிலப்பரப்பு பிரிவை ஏற்க மறுத்த பாலஸ்தீன தரப்பு இஸ்ரேல் நாடு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. மேற்குகரை மற்றும் காசா முனை என இரு பகுதிகளாக இருந்த பாலஸ்தீனத்தை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிர்வகித்து வந்தது. அப்போது, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கு மையமாக இருந்த ஜெருசலேமை சர்வதேச நகரமாக 1947-ல் ஐநா அறிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பின் ஜெருசலேமில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும் எனவும் அங்கு வசிக்கும் நபர்கள் தாங்கள் இஸ்ரேலுடன் இணையவேண்டுமா? பாலஸ்தீனத்துடன் இணைய வேண்டுமா? என அறிவிக்கும் முடிவின் அடிப்படையில் ஜெருசலேம் இஸ்ரேலுடன் இணையலாம் அல்லது பாலஸ்தீனத்துடன் இணையலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பை பாலஸ்தீன விடுதலை அமைப்பு நிராகரித்தது. தொடர்ந்து 1948-ல் நடந்த போரில் ஜெருசலேமின் கிழக்கு பகுதியை ஜோர்டான் கைப்பற்றியது.

ஜெருசலேமின் கிழக்குப்பகுதியில் பழைய நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் கிருஸ்தவ, இஸ்லாமிய, யூத புனித தளங்கள் அமைந்துள்ளன. குறிப்பாக பழைய நகரில், யூத புனித தளமான டெம்பிள் மவுண்ட் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தளமான அல் அக்சா மத வழிப்பாட்டு தளமும் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது.

இதனை தொடர்ந்து 1967-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே போர் நடந்தது. இந்த போரின் போது ஜோர்டான் வசம் இருந்த கிழக்கு ஜெருசலேமின் பழைய நகர் பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது. கிழக்கு ஜெருசலேம் பழைய நகர் கைப்பற்றப்பட்டதை இதனை ஆண்டு தோறும் யூத காலண்டர் அடிப்படையில் ‘ஜெருசலேம் தினம்’ என்ற பெயரில் இஸ்ரேல் கொண்டாடி வருகிறது.

இந்த தினத்தில் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் உள்ள தெருக்கள் வழியாக யூத புனித தளம் அமைந்துள்ள டெம்பிள் மவுண்ட் பகுதிக்கு இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்துடன் பேரணியாக வருவது வழக்கம். அல் அக்சா மத வழிபாட்டு தளம் அமைந்துள்ள இடத்தில் இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவதால் இந்த பேரணியின்போது இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ‘ஜெருசலேம் நாள்’ நேற்று கொண்டாடப்பட்டது.
அந்த வகையில், நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கிழக்கு ஜெருசலேமின் பழைய நகரில் பாலஸ்தீனர்கள் வசிக்கும் பகுதி வழியாக பேரணியாக சென்றனர்.

அப்போது, இஸ்ரேலியர்களுக்க்கு பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசி தடுத்தனர். தொடர்ந்து இஸ்லாமிய மத வழிபாட்டு தளமான அல் அக்சா மசூதியில் சுற்றுச்சுவர் வளாகம் வழியாக பேரணி சென்றது. அங்குள்ள டெம்பிள் மவுண்ட் பகுதியில் இஸ்ரேலியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியின் போது இஸ்ரேலியர்கள் – பாலஸ்தீனர்கள் இடையே மோதல் வெடித்ததால் பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டது.

713274 j - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories