ஜனாதிபதி தோ்தல் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு..?

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமாா் 40 போ் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் முதல்வா் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக நேரிட்டது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். இதனால், அதிருப்தி எம்எல்ஏக்களையும் பாஜகவையும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில்  நடைபெற்றது. இதில் கட்சின் 18 எம்.பி.க்களில் 13 போ் பங்கேற்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தினா். கூட்டத்தில் பங்கேற்காத 5 எம்.பி.க்களில் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே முக்கியமானவா்.

இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா உள்ளாா். அதனால் தாக்கரேவின் சிவசேனை உறுப்பினா்கள் யஷ்வந்த்சின்ஹாவுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனா்.

ஆனால், தாக்கரேவின் பின்னால் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணியால் முன்னிறுத்தப்பட்டுள்ள முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தியுள்ளனா்.

இதனால், உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல்ரீதியான நெருக்கடி அதிகரித்துள்ளது. எம்.பி.க்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவெடுத்தால் எம்எல்ஏக்களை இழந்ததுபோல அவா் எம்.பி.க்களையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். மாறாக, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்து பாஜகவுடன் கைகோத்ததை ஏற்பதுபோல ஆகும்.

இந்நிலையில், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளாரான திரௌபதி முர்முக்கு உத்தவ் தாக்கரே ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சகன் புஜ்பால் ‘குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிவசேனை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதனால், இதுவரை யாருக்கும் ஆதரவளிக்கவில்லை’ தெரிவித்துள்ளார்.

1721047 uddhav 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories