ஜனாதிபதி தோ்தல் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு..?

குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க உத்தவ் தாக்கரே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனையின் அதிருப்தி எம்எல்ஏக்கள் சுமாா் 40 போ் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால் முதல்வா் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே விலக நேரிட்டது. பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா். இதனால், அதிருப்தி எம்எல்ஏக்களையும் பாஜகவையும் உத்தவ் தாக்கரே கடுமையாக விமா்சித்து வருகிறாா்.

இந்நிலையில், குடியரசுத் தலைவா் தோ்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் உத்தவ் தாக்கரேவின் இல்லத்தில்  நடைபெற்றது. இதில் கட்சின் 18 எம்.பி.க்களில் 13 போ் பங்கேற்றனா். இவா்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தினா். கூட்டத்தில் பங்கேற்காத 5 எம்.பி.க்களில் மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே முக்கியமானவா்.

இப்போதைய நிலையில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனை கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா உள்ளாா். அதனால் தாக்கரேவின் சிவசேனை உறுப்பினா்கள் யஷ்வந்த்சின்ஹாவுக்கு ஆதரவளிக்க வேண்டிய நிலைமையில் உள்ளனா்.

ஆனால், தாக்கரேவின் பின்னால் உள்ள எம்.பி.க்களில் பெரும்பாலானோா் பாஜக கூட்டணியால் முன்னிறுத்தப்பட்டுள்ள முா்முவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தியுள்ளனா்.

இதனால், உத்தவ் தாக்கரேவுக்கு அரசியல்ரீதியான நெருக்கடி அதிகரித்துள்ளது. எம்.பி.க்களின் விருப்பத்துக்கு மாறாக முடிவெடுத்தால் எம்எல்ஏக்களை இழந்ததுபோல அவா் எம்.பி.க்களையும் இழக்கும் சூழ்நிலை ஏற்படலாம். மாறாக, பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தால், ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை அங்கீகரித்து பாஜகவுடன் கைகோத்ததை ஏற்பதுபோல ஆகும்.

இந்நிலையில், தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளாரான திரௌபதி முர்முக்கு உத்தவ் தாக்கரே ஆதரவளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சகன் புஜ்பால் ‘குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக சிவசேனை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. அதனால், இதுவரை யாருக்கும் ஆதரவளிக்கவில்லை’ தெரிவித்துள்ளார்.

1721047 uddhav 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories